மிரட்டும் எரிமலை; வெளியேறும் மக்கள்

மிரட்டும் எரிமலை; வெளியேறும் மக்கள்

1 mins read

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் ஆக துடிப்­பு­மிக்க எரி­ம­லை­களில் ஒன்­றான மெராப்பி எரி­மலை வெடிக்­கும் அபா­யம் ஏற்­பட்­டுள்­ள­தால் அரு­கில் வசிக்­கும் கிரா­ம­வா­சி­களை அந்­நாட்டு அதி­கா­ரி­கள் பத்­தி­ர­மாக வெளி­யேற்றி வரு­கின்­ற­னர். எரி­மலை வெடிப்­புக்­கான அறி­கு­றி­கள் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­வ­தால் எச்­ச­ரிக்கை நிலை உயர்த்­தப்­பட்­டுள்­ளது.

எரி­ம­லைக்கு அரு­கில் வசிக்­கும் முதி­யோர், கர்ப்­பி­ணி­கள், மக­ளிர், சிறு­வர்­கள், உடற்­கு­றை­யுள்­ளோர் என 600க்கும் மேற்­பட்­டோரை இந்­தோ­னீ­சி­யா­வின் தேசிய பேரி­டர் நிர்­வாக அமைப்பு நேற்று வெளி­யேற்­றி­யது. கிரு­மித்­தொற்று நெருக்­க­டி­நி­லை­யின்­போது கிரா­ம­வா­சி­கள் வெளி­யேற்­றப்­பட்­ட­தால் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை அதி­கா­ரி­கள் கடைப்­பி­டித்­த­தாக இந்­தோ­னீ­சிய அர­சாங்­கம் தெரி­வித்­தது. வசிப்­பி­டங்­க­ளி­லி­ருந்து துயர்­து­டைப்பு முகாம்­க­ளுக்கு கொண்டு செல்­லப்­பட்ட கிரா­ம­வா­சி­கள் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருந்­த­னர். அது­மட்­டு­மல்­லாது, பாது­காப்­பான தூர இடை­வெளி கடைப்­பி­டிக்­கப்­பட்­டது. இந்­நி­லை­யால், மெராப்பி எரி­மலை வெடித்­தால் 5 கிலோ­மீட்­டர் சுற்­று­வட்­டா­ரத்­தில் எரி­ம­லைக் குழம்பு, கறும்­புகை அபா­யம் ஏற்­படும் சாத்­தி­யம் இருப்­ப­தாக எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. 2010ஆம் ஆண்­டில் ஏற்­பட்ட வெடிப்­பின் கார­ண­மாக 300க்கும் மேற்­பட்­டோர் உயி­ரிழந்­த­னர்.