நீர் மாசுபாடு: 100,000 ரிங்கிட் அபராதம், சிறைத்தண்டனை

நீர் மாசுபாடு: 100,000 ரிங்கிட் அபராதம், சிறைத்தண்டனை

1 mins read
2279e29d-32e3-4316-8b13-234a024a1bd9
படம்: ஏஎஃப்பி -

ஆறு­களை மாசு­படுத்து­வோ­ருக்­குக் கடு­மை­யான அப­ரா­தம் விதிக்க வழி­வ­குக்­கும் சட்­டத்­தி­ருத்­தங்­க­ளுக்கு மலே­சியா­வின் சிலாங்­கூர் மாநில அரசு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

அத்­த­கைய நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வோ­ருக்­குக் கட்­டா­யச் சிறைத்­தண்­டனை விதிக்­க­வும் புதிய சட்­டத்­தி­ருத்­தங்­கள் வழி­வகை செய்­கின்­றன.

ஆற்­று­நீரை மாசு­ப­டுத்­து­வோருக்­கான அப­ரா­தத்தை 10,000 ரிங்­கிட்­டில் இருந்து 100,000 ரிங்­கிட்­டாக உயர்த்த அர­சாங்­கம் திட்­ட­மிட்­டுள்­ளது என்று சிலாங்­கூர் முதல்­வர் அமி­ரு­தீன் ஷாரி கடந்த வாரம் தெரி­வித்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

இதற்­கி­டையே, கண்­டாங், ரவாங் ஆகிய ஆறு­களை மாசு­படுத்­தி­ய­தா­கக் கூறி, நான்கு செம்­பனை எண்­ணெய்ச் சுத்­தி­கரிப்பு ஆலை­க­ளின் இயக்­கு­நர்­கள் மீது செலா­யாங் அமர்வு நீதி­மன்­றத்­தில் நேற்று குற்­றம் சுமத்­தப்­பட்­டது. குற்­றம் புரிந்­தது உறுதி­யா­னால், அவர்­க­ளுக்கு ஐந்­து ஆண்டு வரை சிறை அல்­லது 100,000 ரிங்­கிட் வரை அபராதம் அல்­லது இவ்­விரு தண்­ட­னை­களும் விதிக்­கப்­ப­ட­லாம்.

அத்­து­டன், அந்­நால்­வ­ரும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் எட்­டுப் பேருக்­குச் சட்­ட­வி­ரோ­த­மாக அடைக்­க­லம் அளித்த குற்­றச்­சாட்­டை­யும் எதிர்­நோக்­கு­கின்­ற­னர். குற்­றம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டால் 30,000 ரிங்­கிட் வரை அப­ரா­தம் அல்­லது ஓராண்டு வரை சிறை அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.