மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினின் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணியும் இடம்பெற்றுள்ளது. சொல்லப்போனால் தேசிய முன்னணியின் ஆதரவு இல்லாவிடில் திரு முகைதீனின் ஆட்சி கவிழ்ந்து
விடும்.
இந்நிலையில், அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென்றால் தனது நிபந்
தனைகளுக்குப் பிரதமர் முகைதீன் உட்பட வேண்டும் என்று தேசிய முன்னணி ஒரு போடு போட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை கடன் அடைப்பைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசாங்கம் அனுமதி தந்தால்தான் தேசிய முன்னணியின் 42 நாடாளு மன்ற உறுப்பினர்களும் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பர் என்று அம்னோவைச் சேர்ந்த பெக்கான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நஜிப் ரசாக் கூறினார்.
மலேசியர்கள் தங்கள் ஊழியர் சேமநிதியிலிருந்து 10,000 ரிங்கிட்டை வெளியே எடுக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று தனது இரண்டாவது நிபந்தனை யையும் தேசிய முன்னணி முன்வைத்துள்ளது.
"'நாங்கள் முன்வைக்கும் இரண்டு நிபந்தனைகளுக்கும்
அரசாங்கம் இணக்கம் தெரிவித்தால் மட்டுமே எனது கூட்டணியைச் சேர்ந்த நண்பர்களும் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிப்போம்.
"நிபந்தனையுடனான ஆதரவை நாங்கள் தெரிவிக்கிறோம்," என்று தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு நஜிப் கூறினார்.
நாடாளுமன்றத்தில் வரவு
செலவுத் திட்டம் குறித்து விவாதம் நடைபெற்றபோது இதுகுறித்து ஒரு மணி நேரத்துக்குத் திரு நஜிப் பேசினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கும் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிர்க்
கட்சிகள் ஆதரவு தெரிவிக்காது என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மூன்று எதிர்க்கட்சிகளைக் கொண்ட பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு 91 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

