ஆசிய நாடுகளுக்குத் தனது எல்லைகளைத் திறந்துவிடுவது குறித்து ஆஸ்திரேலியா பரிசீலனை செய்து வருகிறது.
சீனாவின் சில பகுதிகளும் இவற்றில் அடங்கும் என்றுஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் நேற்று தெரிவித்தார்.
கொவிட்-19 நெருக்கடிநிலையால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள பொருளியலை மீண்டும் உயிர்ப்பிக்க ஆஸ்திரேலியா தனது எல்லைகளைத் திறந்துவிடத் திட்டமிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல வெளிநாட்டவர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல நியூசிலாந்து நாட்டவர்
களுக்கு மட்டும் கடந்த மாதம் அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்களாக ஆஸ்திரேலியாவில் சமூக அளவில் கொவிட்-19 பாதிப்பு இல்லை.

