தேசப்பற்று சோதனை: ஹாங்காங்கில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கம்; மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பதவி விலக முடிவு

தேசப்பற்று சோதனை: ஹாங்காங்கில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கம்; மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பதவி விலக முடிவு

2 mins read
cb35e167-cf0e-4d54-a777-237019b9d6a1
நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யபட்டதால் ஜனநாயக ஆதரவு உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஒருவருக்கு ஒருவர் ஆதரவு தெரிவித்தனர். மேலும் வூ சீ-வாய், கிளாடியா மோ, லாம் சியுக்-டிங் உட்பட 15 ஜனநாயக ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக பதவி விலக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ் -

உல­கம் முழு­வ­தும் கிரு­மிப்பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக கொவிட்-19 சோத­னை­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. ஆனால் சீனா வித்­தி­யா­ச­மான முறை­யில் சிந்­தித்து ஹாங்­காங் ஜன­நா­ய­க­வா­தி­களை கட்­டுக்­குள் கொண்டு வர 'தேசப்­பற்று' சோத­னையை அறி முகப்படுத்­தி­யி­ருக்­கிறது.

போது­மான தேசப்­பற்று இல்­லாத உறுப்­பி­னர்­களை உடனடியாக பதவி யிலிருந்து நீக்குவதே புதிய நட­வ­டிக்­கை­யின் நோக்­கம் என்று 'எச்கே01', 'சிங்­தாவ்' ஆகிய உள்­ளூர் ஊட­கங்­கள் தெரி­வித்­தன.

இந்­தத் தக­வல் வெளி­யான சில மணி நேரங்­களில் ஜன­நா­யக ஆத­ரவு சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் நான்கு பேர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்பட்­ட­னர்.

முன்­ன­தாக, தேசி­ய பாது­காப்­புக்கு மிரட்­ட­லாக விளங்­கும் அர­சி­யல்­வா­தி­களை ஹாங்­காங் அர­சாங்­கம் உட­ன­டி­யாக நீக்­கு­வ­தற்கு ஏதுவாக தீர்­மா­னம் ஒன்றை பெய்­ஜிங் நிறை­வேற்­றி­யது.

இதை­ய­டுத்து நால்­வ­ரின் பதவி பறிக்­கப்­பட்­டது.

இது, ஹாங்­காங்­கில் ஜன­நா­யக ஆத­ர­வா­ளர்­களை நசுக்­கு­வ­தற்­காக பெய்­ஜிங் எடுத்­துள்ள மற்­றொரு நட­வ­டிக்கை என அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

இந்நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி விலக முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் சிக்கல் அதிகரித்துள்ளது.

நால்­வ­ரின் பதவி நீக்­கம், மற்ற ஜன­நா­யக ஆத­ர­வா­ளர்­க­ளை­யும் ஆத்­தி­ர­மூட்­டி­யுள்­ளது. இதனால் இவர்களுக்கு ஆதரவாக 15 உறுப்பினர்கள் பத­வி விலகியிருக் கின்றனர். ஹாங்காங் சுதந்திரத்தை ஆதரித்தால், சீனாவின் இறை யாண்மையை ஏற்க மறுத்தால், ஹாங்காங் விவகாரத்தில் தலையிட வெளிநாட்டு சக்திகளைக் கேட்டுக் கொண்டால் அல்லது மற்ற வழி களில் தேசிய பாதுகாப்புக்கு மிரட்ட லாக விளங்கினால் அதற்கு காரண மான சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தீர்மானத்தை நிறைவேற்றிய பெய்ஜிங் அரசாங்கம் குறிப்பிட்டது.

நீதிமன்றத்தை அணுகாமல் ஹாங்காங் நிர்வாகம் நேரடியாக சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய புதிய நடைமுறை அனுமதி அளிக்கிறது. கடந்த ஜூன் மாதம் ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அறிமுகப்படுத்திய சீனா, தற்போது சட்டமன்ற உறுப்பினர்களையும் பதவியிலிருந்து அகற்றியுள்ளது.