சிலாங்கூர் நீர் மாசு; நால்வர் கைது

2 mins read
44ab8ea0-1bf5-47eb-8700-f092b86cf1c6
நன்றி: என்எஸ்டி -

பெட்­டா­லிங் ஜெயா: சிலாங்­கூ­ரில் நீர் மாச­டைந்து அத­னால் நீர் சுத்தி ­க­ரிப்பு நிலை­யம் மூடப்­பட்ட விவ­கா­ரத்­தில் நான்கு சந்­தேக நபர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

இந்­தச் சம்­ப­வத்­தால் ஒரு மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட வீடு­க­ளுக்கு நீர் விநி­யோ­கம் பாதிக்­கப்­பட்­டது.

"நீர் மாச­டைந்த விவ­கா­ரம் தொடர்­பில் நள்­ளி­ரவு முதல் இன்று காலை வரை போலி­சார் மேற்­கொண்ட சோத­னை­யில் நால்­வ­ரும் கைதா­கி­னர்," என்று சிலாங்­கூர் குற்­றப் புல­னாய்வுப் பிரி­வின் தலை­வர் மூத்த துணை ஆணை­யர் ஃபட்­சில் அஹ­மட் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தார்.

கொம்­பாக், தாமன்­சாரா, கிளானா ஜெயா ஆகிய வட்­டா­ரங்­களில் நால்­வ­ரும் பிடி­பட்­ட­னர் என்­றும் அவர் கூறினர்.

நால்­வ­ரும் 33 முதல் 43 வயது வரை­யில் உள்­ள­வர்­கள்.

"33 வயது பங்­ளா­தேஷ் ஊழி­ய­ரும் உள்­ளூர்­க்கா­ரர் ஒரு­வ­ரும் வாட­கை­யி­டத்­தில் ரசா­ய­னக் கழி­வு­களை சேக­ரித்து வைத்­தி­ருந்­த­னர். அங்­கி­ருந்து கழிவுநீர் குழா­யில் ரசா­ய­னக் கழிவு கொட்­டப்­பட்­ட­தால் அது கால்­வாய் வழி­யாக நீரில் கலந்து மாசு ஏற்­பட்­டது," என்று திரு ஃபட்­சில் விளக்­கி­னார்.

இதற்கிடையே உரிமம் இல்லாமல் வாடகை இடத்தில் ரசாயனக் கழிவு சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

ரவாங் தாமான் வெலோக்சில் உள்ள அந்த இடத்தை சிலாங்கூர் மாநிலம் மற்றும் பொதுப் போக்கு வரத்து அதிகாரிகள் சோதனையிட் டனர்.

அப்போது பல்வேறு பீப்பாய்களில் ரசாயனக் கழிவு சேகரித்து வைக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒவ்வொரு பீப்பாயிலும் ஆயிரம் லிட்டர் திரவத்தை நிரப்ப முடியும்.

நீர் மாசடைந்த சம்பவத்துக்குப் பிறகு பீப்பாய்களில் இருந்த ரசா யனக் கழிவுகள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளன.