பிலிப்பீன்சை உலுக்கிய 'வாம்கோ' புயல்; முடங்கியது மணிலா

பிலிப்பீன்சை உலுக்கிய 'வாம்கோ' புயல்; முடங்கியது மணிலா

1 mins read
84e45821-72ed-4c76-9ec7-0019cdfeb78d
பிலிப்­பீன்­சின் லுசோன் தீவை சக்­தி­வாய்ந்த வாம்கோ புயல் தாக்­கி­ய­தில் தலை­ந­கர் மணிலா முடங்­கி­யது. படங்கள்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 3

பிலிப்­பீன்­சின் லுசோன் தீவை சக்­தி­வாய்ந்த வாம்கோ புயல் தாக்­கி­ய­தில் தலை­ந­கர் மணிலா முடங்­கி­யது.

மணி­லா­வில் நேற்று கன­மழை பெய்­த­தில் பல இடங்­களில் வெள்­ளம் ஏற்­பட்­டது.

நக­ரின் பல இடங்­களில் மீட்­புப் பணி­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டன. பட­கு­கள் மூலம் பலர் பாதிக்­கப்­பட்ட இடங்­க­ளி­லி­ருந்து வெளி­யே­றி­னர்.

மரி­கினா நக­ரி­லும் ரிசால் மாநி­லத்­தி­லும் உள்ள வீடு­க­ளுக்­குள் வெள்­ளம் புகுந்­தது. இத­னால் மக்­கள் தங்­கள் வீடு­க­ளின் மொட்டை மாடிக்கு விரைந்­த­னர்.

நிலைமை மோச­ம­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக மரி­கினா நகர் மேய­ரான திரு மார்­சி­லினோ தியோ­டோரோ செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

அதி­காலை நேரத்திலி­ருந்து தங்­கள் வீட்டு மொட்டை மாடி­யில் காத்­துக்­கொண்­டி­ருப்­போ­ரின் உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

அவர்­க­ளைக் காப்­பாற்ற ஹெலி­காப்­டர்­களை அனுப்­பி­வைக்­கும்­படி பிலிப்­பீன்ஸ் குடி­மைத் தற்­காப்­புப் படையை திரு தியோ­டோரோ கேட்­டுக்­கொண்­டார்.

மரி­கினா நக­ரில் ஏறத்­தாழ 40,000 வீடு­கள் வெள்­ளத்­தில் மூழ்கி­ விட்­ட­தாக அவர் தெரி­வித்­தார்.

இருப்­பி­னும் மீட்­புப் பணி­களை மேற்­கொள்ள தம்­மி­டம் 50 பட­கு­கள் மட்­டுமே இருப்­ப­தாக அவர் கூறி­னார்.