தோல்வியை ஒப்புக்கொண்ட பிறகு பின்வாங்கிய டிரம்ப்

தோல்வியை ஒப்புக்கொண்ட பிறகு பின்வாங்கிய டிரம்ப்

2 mins read
8595aa46-7129-4882-a290-bc2a8c76945d
அண்மையில் நடைபெற்ற தேர்தலில் திரு ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவித்ததையடுத்து, அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்துக்கு வெளியே கொண்டாடினர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் டிரம்பின் ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர். படம்: ராய்ட்டர்ஸ் -

அமெ­ரிக்க அதி­பர் டோனல்ட் டிரம்ப் ஞாயிறு காலை­யில் வெளி­யிட்ட டுவிட்­டர் பதி­வில் அதி­பர் தேர்­த­லில் தோல்­வி­ய­டைந்­ததை சுருக்­க­மாக ஒப்­புக்கொண்­டார். ஆனால் அதி­லி­ருந்து உடனே பின்­வாங்­கிய அவர், "ஒப்­புக்கொள்­ வ­தற்கு ஒன்­று­மில்லை," என்று கூறி­யுள்ளார்.

தேர்­தல் முடி­வு­களை எதிர்த்து நீதி­மன்­றத்­தில் போரா­டப் போவ­தா­க­வும் அவர் சூளு­ரைத்­துள்­ளார்.

அடுத்த அதி­ப­ராக பொறுப்பு ஏற்­க­விருக்கும் ஜோ பைடனுக்கு மோசமாகிவரும் கிருமிப்பரவலே தீராத தலைவலியாக இருந்து வரு கிறது. தடுப்­பூசி தயா­ரிக்கும் நிறு வனங்களை விரைவில் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

இதற்­கி­டையே திரு பைட­னால் நிய­மிக்­கப்­பட்ட வெள்ளை மாளிகை யின் தலைமை அதி­காரியான ரோன் கிளெய்ன், புதிய நடவடிக்கை களை மேற்கொள்ள டிரம்ப்­பின் நிர்­வா­கம் அனு­ம­தி­ய­ளிக்க வேண்­டும் என்று கேட்­டுக்கொண்­டார்.

நாட்­டின் பாது­காப்­புக்­கும் கொவிட்-19க்கு எதி­ராக போரா­டு­ வ­தற்­கும் இது முக்­கி­யம் என்று அவர் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

சென்ற ஞாயிற்­றுக்கிழமை அன்று கிரு­மித்­தொற்று எண்­ணிக்கை 11 மில்­லி­ய­னை­யும் தாண்­டி­யது. ஒரே வாரத்­தில் ஒரு மில்­லி­யனுக்கு தொற்­றுச்­சம்­ப­வங்­கள் கூடின. அந்த வேகத்தில் தொற்று அதிவேகத்தில் பரவி வருகிறது.

இந்த நிலையில் திரு பைட­னின் அறி­வி­யல் அறி­ஞர்­கள், விரை­வில் ஃபைசர் உள்­ளிட்ட தடுப்­பூசி தயா­ரிக்­கும் நிறு­வ­னங்­களின் அதிகாரி களைச் சந்திப்பார்கள்.

அப்­போது நாடு முழு­வ­தும் பர­வ­லாக தடுப்­பூசி போடு­வ­தற்­கான 'மாபெ­ரும் தள­வா­டத் திட்­டம்' உரு­வாக்­கப்­படும் என்று திரு கிளெய்ன் தெரி­வித்­தார்.

அமெ­ரிக்­கா­வில் இது­வரை 250,000 பேர் தொற்­றுக்­குப் பலி­யாகிவிட்­ட­னர்.

சென்ற நவம்­பர் 3ஆம் தேதி நடைெபற்ற அதி­பர் தேர்­த­லில் 2016ல் குடி­ய­ர­சுக் கட்சி ெவற்றி பெற்ற மாநி­லங்­க­ளை­யும் ஜோ பைடன் கைப்பற்றியுள்ளார்.

ஜன­நா­யக் கட்­சி­யைச் சேர்ந்த முன்­னாள் துணை அதி­ப­ரான அவர் தேசிய அள­வில் தேவைக்கு அதி­க­மாக 290 தேர்வு சபை வாக்­கு ­க­ளை­யும் பெற்றுள்ளார். ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப் பதாகக் கூறியுள்ள அதிபர் டிரம்ப், இதுவரை அதற்கான ஆதாரத்தை வெளியிடவில்லை.