எதிர்க்கட்சிகளையும் அரசாங்கத்தில் சேர்க்க அம்னோ கட்சி வலியுறுத்து

எதிர்க்கட்சிகளையும் அரசாங்கத்தில் சேர்க்க அம்னோ கட்சி வலியுறுத்து

1 mins read
0a152609-188f-4453-9c3a-9f10418bc4aa
படம்: ஏஎஃப்பி -

நாட்டை எல்­லா­ரும் சேர்ந்து ஆட்சி செய்­வ­தன் மூலம் அர­சி­யல் நிலைத்­தன்­மையை ஏற்படுத்த முடியும் என்­றார் அவர்.

அம்னோ தலை­மை­யி­லான தேசிய முன்­ன­ணி­யின் பொதுச் செய­லா­ள­ரான அன்­னு­வார் மூசா இதனை தெரி­வித்­தார்.

முன்­னாள் பிர­த­மர் மகா­தீர் முகம்­மது தலை­மை­யி­லான கூட்­டணி உட்­பட நாடு முழு­வ­தும் உள்ள எதிர்க்­கட்­சி­களை ஆளும் கூட்­டணி நேர­டி­யாக அணுக வேண்­டும்.

மலே­சி­யா­வுக்கு தற்­போது மெகா கூட்­டணி தேவைப்­ப­டு­கிறது. நீண்ட காலமாக தனிப்­பட்ட நபர்­களை மைய­மாக வைத்தே நமது அர­சி­யல் கட்­சி­கள் செயல்­பட்­டுள்­ளன. தனிப்­பட்ட ஒரு­வ­ருக்­காக கட்­சி­களும் போராடி வந்­துள்­ளன. இது போதும். குறைந்­தது 12 அல்­லது 13 கட்­சி­களை உள்­ள­டக்­கிய மெகா கூட்­ட­ணியை உரு­வாக்­கும் முயற்­சி­யில் விரைவில் ஈடுபடப் போகிறேன்," என்று ஃபேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டார்.