'சீனாவில் ஒரு மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது'

2 mins read
12eb9926-ed23-4d8c-84a2-099f53cf8f77
படம்: ராய்ட்டர்ஸ் -

ஏறக்­கு­றைய ஒரு மில்­லி­யன் பேருக்கு சோதனை அடிப்­படை­யில் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளதாக சீன நிறு­வ­ன­மான சைனோ­ஃபார்ம் அறி­வித்­துள்­ளது. ஆனால் தடுப்­பூ­சி­யின் செயல்­தி­றன் குறித்த மருத்­துவ ஆதா­ரங்­களை அது வெளி­யி­ட­வில்லை.

கடந்த ஜூலை­யி­லி­ருந்து மாநில அரசு ஊழி­யர்­கள், அனைத்­து­லக மாண­வர்­கள், அத்­தி­யா­வ­சிய ஊழி­யர்­கள் உட்­பட ஏறக்­கு­றைய ஒரு மில்­லி­யன் பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்டுள்ளது.

"இது­வரை ஒரு­மு­றை­கூட பக்­க­வி­ளை­வு­கள் ஏற்­பட்­ட­தாக புகார் வர­வில்லை. சில­ருக்கு லேசான அறி­கு­றி­கள் மட்­டுமே தென்பட்டு உள்ளன," என்று ஊட­கங்­க­ளி­டம் பேசிய சினோ­ஃபார்ம் தலை­வர் லியூ ஜிங்­ஷென் தெரி­வித்­தார்.

ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­கள், பஹ்­ரைன், எகிப்து, ஜோர்­தான், பெரு, அர்­ஜெண்­டினா உள்­ளிட்ட நாடு­களில் சினோ­ஃபார்ம் நிறு­வ­னம் இரு தடுப்­பூ­சி­க­ளுக்­கான இறு­திக்­கட்ட சோத­னை­களை மேற்­கொண்டு வரு­கிறது.

இதற்­கி­டையே வரும் டிசம்­ப­ரில் கொவிட்-19 தடுப்­பூ­சிகளை விநி­யோ­கிக்­கும் சாத்­தி­ய­முள்­ள­தாக 'பயோன்­டெக்'கின் தலைமை நிர்­வாக அதி­காரி உகுர் சஹின் கூறி­யுள்­ளார். அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனத்துடன் சேர்ந்து அவரது ஜெர்மன் 'பயோன்டெக்' நிறுவனம் தடுப்பூசிகளை தயாரித்து வரு கிறது. அனுமதி கிடைத்ததும் அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் தடுப்பூசிகள் உடனே விநியோகிக் கப்படலாம்.

'ஸூம்' வழியாக ஊடகங்களிடம் பேசிய அவர், "முழு வேகத்தில் செயல்பட்டு வருகிறோம்," என்றார்.

இவ்வாண்டுக்குள் அமெரிக்கா அல்லது ஐரோப்பா அங்கீகாரம் வழங்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர் சொன்னார்.

மற்றொரு நிலவரத்தில் அமெரிக் காவின் தொற்றுநோய் நிபுணரான அந்தோணி ஃபெளசி, "ஃபைசர், மோடெர்னா ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் ஆற்றல் குறித்த புள்ளி விவரங்கள் வலுவாக இருப் பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் புள்ளி விவரங்களை உணவு மற்றும் மருத்துவ நிர்வாகம் ஆய்வு செய்து இறுதி முடிவெடிக்கும் என்று மேலும் திரு ஃபெளசி கூறினார்.