மலேசியாவின் 4 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு

கொவிட்-19 கிருமித்தொற்றை முறியடிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள நிபந்தனையுடனான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நான்கு மாநிலங்களில் மலேசியா தளர்த்தவிருக்கிறது.

ஜோகூர், கெடா, மலாக்கா, திரங்கானு ஆகிய அந்த மாநிலங்களில் நாளை முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. முன்னதாக டிசம்பர் 6ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் கிளந்தான் மாநிலத்தில் முடக்கநிலை அறிவிக்கப்படுகிறது.

அம்மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வெளிநாட்டு ஊழியர்களும் கொவிட்-19 பரிசோதனையை அவசியம் செய்யவேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது.

அங்கு வேகமாகப் பரவிவரும் நோயால் இந்தக் கட்டுப்பாடு இன்று முதல் செயல்படும் என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 9ஆம் தேதி நிபந்தனையுடனான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்பதில் செயல்படுத்தியது.

தலைநகர் கோலாலம்பூர் உட்பட பல மாநிலங்களில் வெளிநாட்டு ஊழியர்கள் கொவிட்-19 பரிசோதனைகளுக்குச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!