ஹாங்காங்: புதிய கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த ஹாங்காங்கில் விதிக்கப்படும் சமூகக் கட்டுப்பாடுகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாகக் குறைகூறல் எழுந்துள்ளது. வர்த்தக முதலாளிகளும் குடியிருப்பாளர்களும் குழப்பமும் ஆத்திரமும் அடைந்திருப்பதாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் ஏழு மில்லியன் மக்களைக் கொண்ட ஹாங்காங், ஆசியாவின் நிதி நடுவம் என்பது அறிந்ததே.
அங்கு தற்போதைய கிருமிப் பரவல் விகிதம் 100,000 பேருக்கு 81 பேர் என்று உள்ளது. உலகின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் ஹாங்காங்கில் வேகமாக அடுத்
தடுத்த கட்டமாக கிருமிப் பரவல் நிகழ்ந்து வருகிறது. தற்போது அங்கு நான்காவது கட்ட கிருமிப் பரவலைச் சமாளிக்க அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
கிருமிப் பரவல் மற்றும் கட்டுப்பாடுகளின் நிலை குறித்து ஹாங்காங்கின் சிட்டி பல்கலைக்
கழக சுகாதாரப் பாதுகாப்பு நிபுணரான துணைப் பேராசிரியர் நிக்கலஸ் தாமஸ் விளக்கினார்.
“கொள்ளைநோய் பரவலில் ஹாங்காங் இதுவரை அதிர்ஷ்ட வசமான நிலையில் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. அதேநேரம் இங்குள்ள குறையும் தெளிவாகத் தெரிகிறது. கட்டுப்பாடுகள் எப்போது நடப்புக்கு வருகின்றன என்பதும் அவை எப்போது நீக்கப்படுகின்றன என்பதும் பொதுமக்களுக்குச் சரிவர தெரிவதில்லை,” என்றார்.
கிருமிப் பரவலை முறியடிப்
பதற்கான கட்டமைப்பு அண்டை வட்டார நாடுகளான நியூசிலாந்து, தென்கொரியா, சிங்கப்பூர் போன்றவற்றில் உள்ளதைப்போல இருக்க வேண்டும் என ஹாங்காங்கின் குடியிருப்பாளர்களும் வர்த்தகர்களும் பெரிதும் எதிர்பார்ப்பதாக புளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
மாதக்கணக்கில் நடைபெற்ற அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களாலும் அதனைத் தொடர்ந்து நீடிக்கும் கொள்ளை நோய் பரவலாலும் ஏற்கெனவே சுருங்கிவிட்ட ஹாங்காங் பொருளியல், தற்போதைய ஒழுங்கற்ற கட்டுப்பாடு
களால் மேலும் நெருக்கடியைச் சந்தித்து வருவதாக அச்செய்தி குறிப்பிடுகிறது.