கருக்கலைப்பை சட்டரீதியாக அனுமதிக்கும் மசோதாவை எதிர்த்து அர்ஜெண்டினாவில் ஆயிரக்கணக்கானோர் நேற்று (நவம்பர் 28) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கத்தோலிக்க, இவான்ஜெலிக்க சமய அமைப்புகளைச் சேர்ந்த பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைநகர் பியூனோஸ் ஐரிசில் உள்ள நாடாளுமன்றத்துக்கு வெளியே அவர்கள் அனைவரும் கூடினர்.
இந்த மசோதாவை சட்டமாக்கக்கூடாது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.