அமெரிக்காவின் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டபோது, ஒரு செல்லப் பிராணியை வெள்ளை மாளிகைக்குள் கொண்டு செல்ல உகந்த நேரம் இது என்று கூறியிருந்தார் திரு ஜோ பைடன்.
திரு பைடனின் மனைவி ஜில் பைடனின் செல்லப் பிராணிகளான ‘சேம்ப்’, ‘மேஜர்’ ஆகிய இரண்டு நாய்கள் வெள்ளை மாளிகையில் அவர்களுடன் வலம் வரும் என்று முதலில் கூறப்பட்டது.
இப்போது சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பூனை வெள்ளை மாளிகை செல்லப்பிராணியாக வலம் வர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் செல்லப் பிராணிகள் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால், பைடன் தம்பதி வெள்ளை மாளிக்கைக்கு வரும் ஜனவரியில் குடிபெயரும்போது அவர்கள் செல்லப் பிராணி பாரம்பரியத்தை மீண்டும் கொண்டு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.