அமெரிக்காவில் நேற்று வியாழக்கிழமை (டிசம்பர் 3) ஒரே நாளில் 210,000 பேருக்கு கொவிட்-19 பதிவாகியிருப்பதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல் தெரிவிப்பதாக ஏஎஃப்பி குறிப்பிட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ஆக அதிகமாக அங்கு ஒரு நாளில் கிருமித்தொற்று பதிவாகியுள்ளது.
அதே 24 மணி நேரத்தில் அங்கு 2,907 பேர் உயிரிழந்திருப்பதாக பல்கலைக்கழகத்தின் தகவல் தெரிவித்தது. கொரோனாவால் உயிரிழந்திருப்போரின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருப்பதை இது காட்டுகிறது.

