இந்தோனீசியாவின் கிழக்கு ஜாவாமாநிலத்தில் மூத்த மருத்துவரும் அவரது மனைவியும் கொவிட்-19 தொற்றால் மாண்டது அந்நாட்டின் சுகாதார முறைஒழுங்காக இல்லை என்பதை உணர்த்துவதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
டாக்டர் சார்ஜோனோ உடோமோ டிசம்பர் 1ஆம் தேதி தாம் பணியாற்றிய மருத்துவமனையில் கொவிட்-19 சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
24 மணி நேரத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சுரபாயா நகரில் செயற்கை சுவாசக் கருவியை மருத்துவமனை நிர்வாகம் தேடி வருவதாக மற்றொரு மருத்துவர் கூறினார்.
அடுத்த சில மணி நேரங்களில் மருத்துவரும் அவருக்கு முன்னர் சிகிச்சை பெற்று வந்த அவரது மனைவி மார்டினியும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
சுகாதார வசதிகள் கொள்ளைநோய் அபாயத்தைச் சமாளிக்கும் அளவுக்கு இல்லாததால் மோசமான நிலைக்கு இந்தோனீசியா தள்ளப்பட்டு உள்ளதாக ராய்ட்டர்ஸ் கூறியது.

