பெய்ஜிங்: சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
சுரங்கத்தில் மேலும் ஐவர் சிக்கி யிருக்கலாம் என நம்பப்படுகிறது.
மீட்புப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வரும் நேற்று 18 சடலங்கள் மீட்கப்பட்டன. ஒருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டார்.
சென்ற வெள்ளிக்கிழமை அன்று சோங்சிங்கில் உள்ள சுரங்கத்தில் கரியமில வாயு கசிந்ததால் விபத்து ஏற்பட்டது.
மொத்தம் 24 ஊழியர்கள் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர்.
பூமிக்கடியில் சுரங்கம் தோண்டும் சாதனங்களை அகற்றிக்கொண்டிருக்கும்போது ஊழியர்கள் விபத்தில் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இந்தச் சுரங்கம் மூடப்பட்டது. விபத்துக்கான காரணத்தை அறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

