வாஷிங்டன்: அமெரிக்கா, சீனாவுக்கு எதிராக மற்றொரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது சீனா நிதியுதவியளிக்கும் ஐந்து பரிமாற்றத் திட்டங் களுக்கு அமெரிக்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
சீனாவின் பிரசாரக் கருவிகளாக அவை செயல்படுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ வெளியிட்ட அறிக்கையில் கலாசார பரிமாற்றத் திட்டம் எனும் போர்வையில் அமெரிக்காவின் சட்டத்தின்கீழ் பரிமாற்றத் திட்டங்கள் நடத்தப்படுவதாக தெரி வித்தார். இதன் மூலம் வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் பயணம் மேற்கொள்ள முடியும். "இதர பரிமாற்றத் திட்டங்கள் இரு தரப்புக்கும் நன்மை அளிக்கக் கூடியவை, ஆனால், சீனாவின் முழு நிதியுதவியுடன் நடத்தப்படும் ஐந்து திட்டங்கள் கேள்விக்குறியதாக இருக்கின்றன," என்றார் திரு பொம்பியோ சொன்னார்.
"சீனாவில் பொதுமக்களைச் சந்தித்துப் பேசுவதற்குப் பதிலாக கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகளுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் பரிமாற்றத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன," என்றும் பொம்பியோ அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

