இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்குமாறு ஃபைசர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
கொவிட்-19 தடுப்பூசிகள் தயாரிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தடுப்பூசிகளை தயாரித்து வரும் பல நாடுகளுக்கு இடையே இந்தியாவில் 3 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனைகளில் ஆராயப்பட்டு வரும் இந்நேரத்தில் ஃபைசரின் இம்முடிவு வெளிவந்துள்ளது.
இந்த தடுப்பூசியை பயன்படுத்த பிரிட்டனும் பஹ்ரைனும் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளன.