பிரிட்டனில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 பேருக்கு ஒவ்வாமை விளைவுகள் ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு புதிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
பைசர்-பயோஎன்டெக் உருவாக்கியுள்ள தடுப்பூசியைப் பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கிய நிலையில், முதற்கட்டமாக கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் நோய் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு அதைச் செலுத்தும் பணி தொடங்கியது.
அவ்வாறு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சுகாதாரப் பணியாளர்கள் 2 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்களுக்கு மாற்று மருந்து கொடுக்கப்பட்டது. மேலும், பிரிட்டன் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு புதிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
ஒருசில மருந்துகள், உணவுகள் மற்றும் தடுப்பூசிகளால் ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகள் ஏற்படும் சாத்தியமுள்ளவர்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடுவதால் சிலருக்கு இதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியால் ஒவ்வாமை ஏற்பட்ட 2 சுகாதார பணியாளர்களுக்கும் ஏற்கனவே ஒவ்வாமை பிரச்சினை இருந்ததாகக் கூறப்படுகிறது.