ஜெர்மனியில் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் நபர் 101 வயது மூதாட்டி

மூத்தோருக்கான இல்லம் ஒன்றில் வசிக்கும் 101 வயது பெண்மணிதான் ஜெர்மனியில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் நபர். நேற்று (டிசம்பர் 26) அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

ஜெர்மனியின் கிழக்கு மாநிலமான சாக்சோனி அன்ஹால்டில் உள்ள மூத்தோர் இல்லத்தில் எடித் வோய்சலா எனும் அந்த மூதாட்டியுடன் அங்கு வசிக்கும் சுமார் 40 முதியோர், 10 ஊழியர்கள் ஆகியோருக்கும் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி நேற்று போடப்பட்டதாக அந்த இல்லத்தின் மேலாளர் டோபியாஸ் க்ரூகெர் ஏஎஃப்பி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இன்று முதல் ஜெர்மனியிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது.

ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி மருந்துகள் பல்வேறு வட்டார சுகாதார நிலையங்களுக்கு நேற்று விநியோகம் செய்யப்பட்டன. மூத்தோர் பராமரிப்பு இல்லவாசிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், பராமரிப்பு ஊழியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட ஜெர்மன், தற்போது பரவும் இரண்டாவது அலையில் தொற்று எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பதால் திணறி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 14,455 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியதாகவும் 240 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜெர்மனியில் இதுவரை 29,422 பேர் கொவிட்-19ஆல் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!