கொள்ளைநோய்க்கு முற்றுப் புள்ளி இல்லை: உலக நிறுவனம்

2 mins read
63d6f5a0-76b0-4596-9e62-4849b37b9e3a
ஜெர்மனியின் மத்திய வடக்கு வட்டார நகரான ஹால்பெர்ஸ்டாட்டின் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் 101 வயது மூதாட்டி எடித் குவோய் ஸாலாவுக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது. படம்: ஏஎஃப்பி -

ஜெனிவா: கொவிட்-19 நெருக்­க­டியே உல­கின் ஆகக் கடைசி கொள்ளைநோய் என கருதிவிடக்­

கூ­டாது என உல­கச் சுகா­தார நிறு­ வ­னத் தலைமை இயக்­கு­நர் டெட்­ரோஸ் தெரி­வித்­துள்­ளார். பரு­வ­நிலை மாற்­றத்­தை­யும் வன­வி­லங்கு நல்­வாழ்­வை­யும் கவ­னத்­தில் கொள்­ளா­மல் மனிதகுலத்­தின் நலத்தை மேம்­ப­டுத்த முயல்­வது பலன்தராது என அவர் கூறி­யுள்­ளார்.

அத்­து­டன், அடுத்த நெருக்­க­டியை எதிர்­கொள்­வ­தற்கு எது­வும் செய்­யா­மல், நோய்ப் பர­வல்­க­ளின்­போது பணத்தை வாரி­யி­றைப்­பது 'குறு­கிய நோக்­கத்­து­ட­னான, அபா­ய­க­ர­மான போக்கு' என்­றும் அவர் சாடி­யி­ருக்­கி­றார்.

முதன்­மு­றை­யாக 'கொள்­ளை­நோய் ஆயத்­த­நிலை அனைத்­து­லக நாள்' அனு­ச­ரிக்­கப் பட்­டதை­யொட்டி காணொளி வழி­யாக உரை­யாற்­றிய டாக்­டர் டெட்­ரோஸ், "வெகு­கா­ல­மாக, பீதி­யி­லும் புறக்­க­ணிப்­பி­லுமே இவ்­வு­ல­கம் இயங்கி வரு­கிறது," எனக் குறிப்­பிட்­டார்.

"ஒரு கொள்­ளை­நோய் பர­வும்­போது, அதை எதிர்­கொள்­ள பணத்தை வாரி இறைக்­கி­றோம். அது ஓய்ந்­த­தும், அதைப் பற்றி மறந்­து­வி­டு­கி­றோம். அடுத்த நோய்ப் பர­வ­லைத் தடுப்­ப­தற்கு எது­வும் செய்­வ­தில்லை. இது, குறு­கிய நோக்­கத்­து­டன் கூடிய, அபா­ய­க­ர­மான போக்கு என்­ப­து­டன், இதைப் புரிந்து­ கொள்­வ­தும் கடி­ன­மாக இருக்­கிறது," என்­றார் அவர்.

"இதுவே இறுதி நோய்ப் பர­வ­லாக இருக்­காது என்­பதை வர­லாறு நமக்­குச் சொல்­கிறது. மனி­தர்­கள், விலங்­கு­க­ளின் சுகா­தா­ரத்­திற்­கும் கோள்களுக்கும் இடையே அணுக்­கத் தொடர்­பு­கள் இருப்­பதை இப்­போ­தைய கிருமிப் பர­வல் நமக்கு உணர்த்தி இருக்­கிறது," என்று டாக்­டர் டெட்­ரோஸ் கூறி­னார்.

கடந்த ஆண்டு டிசம்­ப­ரில் சீனா­வில் தொடங்­கிய கொரோனா தொற்­றால் உல­கம் முழு­தும் இது­வரை குறைந்­தது 1.75 மில்­லி­யன் பேர் மாண்­டு­விட்­ட­னர்; கிட்­டத்­தட்ட 80 மில்­லி­யன் பேர் பாதிக்­கப்­பட்­டு­உள்ளனர்.

கடந்த 12 மாதங்­களில், உல­கம் தலை­கீ­ழா­கி­விட்­டது என்­றும் சமூ­கங்­க­ளி­லும் பொரு­ளி­யல்­க­ளி­லும் கொரோனா தொற்று பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­விட்­டது என்­றும் குறிப்பிட்ட அவர், இந்த நோய்த்­தொற்­றில் இருந்து நாம் அனை

­வ­ரும் பாடம் கற்­றுக்­கொள்ள வேண்­டும் என்­றார்.

அத்­து­டன், எல்­லா­வி­த­மான நெருக்­க­டி­க­ளை­யும் தடுத்து, கண்­ட­றிந்து, மட்­டுப்­ப­டுத்த ஆயத்­த­மா­

வ­தற்கு முத­லீடு செய்ய வேண்­டும் என்று உலக நாடு­க­ளுக்­கு அவர் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.