பாரிஸ்: கிருமித்தொற்று சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தால் நாடளாவிய மூன்றாவது முடக்கத்தை அமல்படுத்த வேண்டி வரும் என பிரான்ஸ் சுகாதார அமைச்சர் டாக்டர் ஒலிவியர் வெரன் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸுக்குப் பிந்திய தொற்று அதிகரிப்பைச் சந்தித்து வரும் பிரான்சில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 15,000 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. புதிய வகைக் கிருமி அங்கு முதன்முதலாக கடந்த வெள்ளிக்கிழமை உணரப்பட்டது.
"மக்களைப் பாதுகாப்பதே முக்கியம் என்பதால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மீண்டும் அமல்
படுத்துவதில் தயக்கம் இல்லை," என்றார் அமைச்சர்.

