பெய்ஜிங்கில் பெருகும் தொற்று; மாவட்டங்களில் அவசரநிலை

பெய்ஜிங்கில் பெருகும் தொற்று; மாவட்டங்களில் அவசரநிலை

1 mins read

பெய்­ஜிங்: சீனாவில் புதி­தாக 22 பேருக்கு கொரோனா கிருமி தொற்­றி­ய­தாக அந்நாட்டின் தேசிய சுகா­தார ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது. இவர்­களில் 12 பேருக்கு உள்­ளூ­ரில் தொற்­றி­ய­தா­க­வும் அது கூறி­யது. இந்த 12 பேரில் ஐவர் தலை­ந­கர் பெய்­ஜிங்­கைச் சேர்ந்­த­வர்­கள்.

தொடர்ந்து நான்­கா­வது நாளாக பெய்­ஜிங்­கில் புதிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­ன­தால் விடு­முறை காலத்­தில் தொற்று எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்ற அச்­சம் அங்கு எழுந்­துள்­ளது. எனவே பெய்­ஜிங்­கில் கட்­டுப்­பா­டு­களை அதி­க­ரிக்க முடி­வெ­டுக்­கப்­பட்டு உள்­ளது.

பெய்­ஜிங்­கிற்கு உட்­பட்ட எல்லா மாவட்­டங்­களும் அவ­ச­ர­நி­லை­யைக் கடைப்­பி­டிக்­கு­மா­றும் தொற்று காணப்­பட்ட குடி­யி­ருப்­புப் பகு­தி­க­ளை­யும் கிரா­மங்­க­ளை­யும் தனி­மைப்­ப­டுத்­து­மா­றும் தலை­ந­க­ரின் கம்­யூ­னிஸ்ட் கட்­சித் தலை­வர் காய் குய் அறி­வு­றுத்தி உள்­ளார்.

இவற்­றில் ஷுன்யி மாவட்­டம் அபா­யம் மிகுந்­த­தா­கத் தோற்­ற­ம­ளிக்­கிறது. அண்­மைய தொற்­றுச் சம்­ப­வங்­கள் அனைத்தும் இந்த மாவட்­டத்­தில்­தான் பதி­வா­யின. எனவே போர்க்­கால நட­வ­டிக்­கை­யாக மாவட்­டத்­தில் உள்ள 800,000 குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­கும் கொரோனா கிரு­மித்­தொற்று பரி­சோ­தனை நடத்­தப்­பட்டு வரு­கிறது.

சந்­தி­ர­மு­றைப் புத்­தாண்டு கொண்­டாட்ட ஒரு­வார விடு­முறை பிப்­ர­வரி 11ஆம் தேதி தொடங்­கு­வ­தால் அதற்கு முன்­னர், தொற்­றுக்கு அதி­கம் இலக்­கா­கக்­கூ­டிய சுமார் 50 மில்­லி­யன் மக்­க­ளுக்கு தடுப்­பூசி மருந்து செலுத்த அதி­கா­ரி­கள் திட்­ட­மிட்­டுள்­ள­தாக அர­சாங்க ஊட­க­மான 'குளோ­பல் டைம்ஸ்' தெரி­வித்­துள்­ளது.