இறந்துபோன இணை; உடலருகில் அமர்ந்து துக்கம் அனுசரித்த அன்னப் பறவையால் 23 ரயில்கள் காத்திருப்பு

இணைப் பறவை இறந்த துக்கம் தாளாமல் அதன் உடலருகே அமர்ந்திருந்த அன்னப் பறவையால 23 ரயில்கள் பயணத்தைத் தொடர முடியாமல் காத்திருக்க வேண்டியதாயிற்று.

ஜெர்மனியின் கேசல், கோட்டிங்கன் நகரங்களுக்கிடையேயான அதிவேக ரயில் தடத்துக்கு அருகில் இரு அன்னப் பறவைகள் சுற்றித் திரிந்ததாக கேசல் நகர போலிசார் தெரிவித்தனர்.

அவற்றில் ஒன்று மின்சார கம்பிகளில் சிக்கி உயிரிழந்தது. இறந்துபோன பறவையின் உடலுக்கருகில் அமர்ந்த அதன் இணை அவ்விடத்தை விட்டு நகருவதாயில்லை.

அதனால் அந்தத் தடத்தில் செல்ல வேண்டிய 23 ரயில்கள் தங்களது பயணத்தை ஒத்தி வைத்துக் காத்திருந்தன.

தீயணைப்புப் படையினர் சிறப்பு உபகரணங்களைக் கொண்டு உயிருடனிருந்த அன்னப் பறவையை அவ்விடத்தில் இருந்து அகற்றினர். பத்திரமாக மீட்கப்பட்ட அது, பின்னர் ஃபுல்டா நதியில் விடப்பட்டது.

சுமார் 50 நிமிட தாமதத்துக்குப் பிறகு ரயில்கள் அந்தத் தடத்தில் பயணத்தைத் தொடர்ந்தன.

கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவம் பற்றிய தகவல்கள் நேற்று வெளியாகின.

பொதுவாக, அன்னப் பறவைகள் வாழ்நாள் முழுவதும் ஒரே இணையுடன் தான் வாழும் என பிரிட்டனின் ராயல் சொசைட்டி பறவைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!