மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள தம்பின் மாவட்டத்தில் உள்ளது தம்பின் நகரம்.
அங்குள்ள தம்பின் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த கொவிட்-19 நோயாளி ஒருவர், திடீரென அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
நேற்று காலை 11.45 மணிக்கு அவர் மருத்துவமனை படுக்கையில் இருந்து காணாமல் போனது தெரியவந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடைசியாக அந்த ஆடவர் பச்சை நிற டி-சட்டை அணிந்திருந்ததாக தம்பின் மாவட்ட போலிஸ் தலைவர் அனுவல் அப் வாகாப் கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அவரை தேடும் முயற்சியில் போலிசார் இறங்கியுள்ளனர்.

