மலேசியா: புதிய உச்சமாக 2,593 பேருக்கு கொரோனா தொற்று

மலேசியா: புதிய உச்சமாக 2,593 பேருக்கு கொரோனா தொற்று

1 mins read

மலே­சி­யா­வில் இதற்­கு­முன் இல்­லாத வகை­யில் நேற்று ஒரே நாளில் 2,593 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. இதை­ அடுத்து, மருத்­து­வ­ம­னை­யில் படுக்­கை­கள் கிட்­டத்­தட்ட முழுக் கொள்­ள­ளவை எட்­டும் வகை­யில் வேக­மாக நிரம்பி வரு­வ­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

மலே­சி­யா­வின் ஆகப் பணக்­கார, வளர்ச்­சி­ய­டைந்த மாநி­ல­மான சிலாங்­கூ­ரில்­தான் நேற்று ஆக அதி­க­மாக அங்கு 965 கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின. அத­னைத் தொடர்ந்து ஜோகூ­ரில் 571 சம்­ப­வங்­களும் சாபா­வில் 405 சம்­ப­வங்­களும் பதி­வா­கின.

தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரில் மட்­டும் நேற்று புதி­தாக 256 பேரை கொரோனா தொற்­றியது.இப்­போ­தைக்கு 24,347 பேர் கிருமித்­தொற்­றால் அவ­திப்­பட்டு வரு­கின்­ற­னர். நாட்­டி­லுள்ள மருத்­து­வ­ம­னை­களில் மொத்­தம் 28,674 படுக்­கை­கள் உள்ள நிலை­யில், அவற்­றில் கிட்­டத்­தட்ட 85%, கொரோனா நோயா­ளி­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. ஒட்­டு­மொத்­தத்­தில், மலே­சி­யா­வில் இது­வரை 125,438 பேரை கொரோனா தொற்­றி­விட்­டது.

கடந்த செப்­டம்­ப­ரில் கிரு­மித்­தொற்று மூன்­றா­வது அலை அடிக்­கத் தொடங்­கிய பிறகு, மலே­சி­யா­வில் நாள்­தோ­றும் நான்கு இலக்­கங்­களில் புதிய கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வாகி வரு­கின்­றன.

கிரு­மித்­தொற்­றால் நேற்று மேலும் நால்­வர் மர­ண­ம­டைந்­த­னர். இதை­ய­டுத்து, மலே­சி­யா­வில் கொரோனா தொற்­றால் உயி­ரி­ழந்­தோர் எண்­ணிக்கை 513ஆக அதி­க­ரித்­தது.