தாய்லாந்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பாதிப்பு

தாய்லாந்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பாதிப்பு

1 mins read
4666b5d3-b817-434f-94f0-2c7301203d65
வெளிநாட்டு ஊழியரின் குழந்தைக்கு நடத்தப்பட்ட கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை. படம்: இபிஏ -

கொரோனா நெருக்­க­டி­நிலை கார­ண­மாக தாய்­லாந்­தின் பொரு­ளி­யல் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

அது­மட்­டு­மல்­லாது, கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க அங்கு கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளன. தாய்­லாந்­தில் ஒவ்­வொரு நாளும் 200க்கும் மேற்­பட்­டோ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்டு வரு­கிறது. இது­வரை மொத்­தம் 9,841 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். கிரு­மித்­தொற்று கார­ண­மாக 67 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

சமுட் சாக்­கோன் மாநி­லத்­தில் உள்ள கட­லு­ண­வுச் சந்­தை­யில் பணி­பு­ரிந்த பல­ருக்­குத் திடீ­ரென்று கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டதை அடுத்து தாய்­லாந்­தில் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது. இதற்கு அந்­தக் கட­லு­ண­வுச் சந்­தை­யில் பணி­பு­ரி­யும் மியன்­மார் ஊழி­யர்­களே கார­ணம் என்று தாய்­லாந்து நாட்­ட­வர்­கள் பலர் குறை­கூ­று­கின்­ற­னர். சமுட் சாக்­கோன் மாநி­லத்­தில் கிட்­டத்­தட்ட 260,000 பதிவு செய்­யப்­பட்ட வெளி­நாட்டு ஊழி­யர்­கள் உள்­ள­னர். ஆனால் பதிவு செய்­யப்­ப­டாத வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளை­யும் சேர்த்து ஏறத்­தாழ 400,000 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அந்த மாநி­லத்­தில் இருப்­ப­தாக சமூக ஆர்­வ­லர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கொவிட்-19 பாதிப்பு இல்லை என உறுதி செய்­யும் மருத்­து­வச் சான்­றி­த­ழைச் சமர்ப்­பித்த பிறகே வேலைக்­குத் திரும்ப முடி­யும் என்று வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு முத­லா­ளி­கள் நிபந்­தனை விதித்­தி­ருப்­ப­தாக வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான ஆத­ரவு அமைப்­பு­கள் தெரி­வித்­துள்­ளன.

முத­லா­ளி­கள் பலர் முன்­வைக்­கும் இத்­த­கைய நிபந்­த­னை­க­ளால் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பல­ருக்கு வேலைக்­குத் திரும்ப முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

அத்துடன், அர­சாங்க உதவி பெற முடி­யா­ம­லும் அவர்­கள் சிர­மப்­ப­டு­வ­தாக மனித உரிமை அமைப்­பு­கள் கவலை தெரி­வித்­துள்­ளன. சில வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு கொவிட்-19 மருத்­து­வச் சோதனை நடத்த அர­சாங்க மருத்­து­வ­ம­னை­கள் மறுத்­து­விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.