ஜாமியா இஸ்­லா­மியா பயங்­க­ர­வாத அமைப்­பின் ஆன்­மிகத் தலை­வர் அபு பக்கர் பஷீர் சிறையிலிருந்து விடுதலை

ஜாமியா இஸ்­லா­மியா பயங்­க­ர­வாத அமைப்­பின் ஆன்­மிகத் தலை­வர் அபு பக்கர் பஷீர் சிறையிலிருந்து விடுதலை

2 mins read
7cc80c93-a226-442c-ba3d-2ea4da24cc5f
சொந்த ஊருக்குப் புறப்பட்ட அபு பக்கர் பஷீர் (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ் -

ஜாமியா இஸ்­லா­மியா பயங்­க­ர­வாத அமைப்­பின் ஆன்­மிகத் தலை­வர் அபு பக்­கர் பஹீர் சிறை­யி­லி­ருந்து நேற்று விடு­விக்­கப்­பட்­டார்.

82 வயது மத குரு­வான பஹீர் 2009ஆம் ஆண்­டில் கைது செய்­யப்­பட்­ட­தி­லி­ருந்து சிறை­யில் இருந்து வந்­தார், இந்­தோ­னீ­சி­யா­வின் ஆச்சே மாநி­லத்­தில் பயங்­க­ர­வா­தி­க­ளுக்­கான முகாமை அமைக்க அவர் நிதி வழங்­கி­யது நிரூ­பிக்­கப்­பட்­டதை அடுத்து 2011ஆம் ஆண்­டில் அவ­ருக்கு 15 ஆண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. பஷீ­ரின் உடல்­ந­லம் பாதிப்­ப­டைந்­ததை அடுத்து அவர் முன்­கூட்­டியே விடு­விக்­கப்­பட்­டுள்­ளார். மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யில் அவர் விடு­தலை செய்­யப்­பட்­ட­தாக இந்­தோ­னீ­சிய அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

மேற்கு ஜாவா போகோ­ரில் உள்ள குனோங் சிந்­தூர் சிறைச்­சா­லை­யி­லி­ருந்து பஷீரை அவ­ரது குடும்­பத்­தா­ரும் வழக்­க­றி­ஞ­ரும் அழைத்­துச் சென்­ற­தாக இந்­தோ­னீ­சி­யா­வின் சட்ட, மனித உரிமை அமைச்­சின் பேச்­சா­ளர் திரு­வாட்டி ரிக்கா அப்­பி­ரி­யாந்தி தெரி­வித்­தார்.

பஷீர் சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு அவ­ருக்கு கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது. கிரு­மித்­தொற்று பாதிப்­பில்லை என உறுதி செய்­யப்­பட்­டதை அடுத்து அவர் விடு­தலை செய்­யப்­பட்­டார்.

காலை தொழு­கைக்­குப் பிறகு தமது இரு மகன்­கள், மூன்று வழக்­க­றி­ஞர்­கள், மருத்­துவ அவ­ச­ர­நிலை மீட்­புக் குழு­வைச் சேர்ந்த மருத்­து­வர் ஆகி­யோ­ரு­டன் பஷீர் சிறை­யி­லி­ருந்து புறப்­பட்­டுச் சென்­றார். தமது சொந்த ஊரான மத்­திய ஜாவா­வில் உள்ள சோலோ நக­ருக்கு அரு­கில் உள்ள சுகோ­ஹார்­ஜோ­வுக்கு பஷீர் செல்­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் அவ­ரது வழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார்.

2002ஆம் ஆண்டு இந்­தோ­னீ­சி­யா­வின் பாலித் தீவில் நிகழ்ந்த குண்டு வெடிப்­பில் 202 பேர் மாண்­ட­னர். அந்­தத் தாக்­கு­தலை பஷீர்­தான் திட்­ட­மிட்டு நடத்­தி­ய­தாக நம்­பப்­ப­டு­கிறது. ஆனால் அது­தொ­டர்­பாக அவ­ருக்­குத் தண்­டனை விதிக்­கப்­ப­ட­வில்லை.

சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கப்ப­டு­வ­தற்கு முன்பு இந்­தோ­னீசி­யா­வுக்கு விஸ்­வா­ச­மாக இருப்­பது குறித்­தும் நாட்­டின் பஞ்­ச­சிலா கொள்­கைக்கு உட்­பட்டு நடப்­பது தொடர்­பா­க­வும் பற்­று­றுதி எடுக்க வேண்­டும் என்று பஷீ­ரி­டம் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரி­வித்­து­விட்­டார்.

பஷீ­ருக்­கான சீர்­தி­ருத்­தத் திட்­டம் தொட­ரும் என்று இந்­தோ­னீ­சி­யா­வின் தேசிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு அமைப்­பின் அம­லாக்­கப் பிரி­வுத் தலை­வர் எடி ஹார்­டோனி கூறி­னார்.

"நாட்­டில் அமை­தியை ஏற்­ப­டுத்த உத­வும் வகை­யில் மத போத­னை­களை பஷீர் போதிக்க வேண்­டும் என நாங்­கள் விரும்­பு­கி­றோம்." என்று அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார். பஷீ­ரின் நட­வ­டிக்­கை­கள் கண்­கா­ணிக்­கப்­படும் என்று இந்­தோ­னீ­சிய போலி­சார் தெரி­வித்­த­னர்.

இதற்­கி­டையே, பஷீர் சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டது குறித்து பாலி வெடி­குண்டு தாக்­கு­த­லில் மாண்ட ஆஸ்­தி­ரே­லி­யர்­க­ளின் குடும்­பத்­தி­னர் அதி­ருப்தி தெரி­வித்­துள்­ள­னர்.