கிருமிப் பரவல் உச்சம்; கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க மலேசியா தீவிரம்

கிருமிப் பரவல் உச்சம்; கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க மலேசியா தீவிரம்

1 mins read
e30e29d5-b742-4349-8857-a940e9fb847f
-

மலே­சி­யா­வில் கிரு­மிப் பர­வல் பல்­கிப் பெருகி வரு­வ­தால் அத­னைக் கட்­டுப்­ப­டுத்த மேலும் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை முடுக்­கி­விட அந்­நாடு தயா­ராகி வரு­கிறது.

மாநி­லத்­துக்கு மாநி­லம், மாவட்­டத்­துக்கு மாவட்­டம் பய­ணம் செய்­வ­தைத் தடுக்க அர­சாங்­கம் திட்­ட­மிட்டு இருப்­ப­தாக மலே­சிய சுகா­தார அமைச்­சர் ஆதம் பாபா நேற்று தெரி­வித்­தார்.

வெள்­ளிக்­கி­ழமை தொற்று கார­ண­மாக 16 மர­ணங்­கள் பதி­வா­யின. மேலும் மருத்­து­வ­ம­னை­க­ளின் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் நோயா­ளி­கள் நிரம்பி வழி­கின்­ற­னர். உயிர் பிழைக்க அவர்­க­ளுக்கு செயற்கை சுவா­சக் கருவி தேவைப்­ப­டு­கிறது. பய­ணத் தடை தவிர்த்து, கொவிட்-19 பர­வல் தடுப்பு கட்­டுப்­பா­டு­களை மேலும் கடு­மை­யா­க்க தேசிய பாது­காப்பு மன்­றத்­தி­டம் சுகா­தார அமைச்சு பரிந்­துரை செய்­தி­ருப்­ப­தா­க­வும் டாக்­டர் ஆதம் கூறி­னார்.

கிரு­மித்­தொற்று எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வதை கவ­னத்­தில் கொண்டு பிர­த­மர் முகை­தீன் யாசின் நாளை திங்கட்கிழமை முக்­கிய அறி­விப்பை வெளி­யிட இருக்­கும் நிலை­யில் சுகா­தார அமைச்­சர் இந்­தக் கருத்­து­க­ளைத் வெளியிட்டுள்­ளார்.

இந்­நி­லை­யில், சர­வாக் மாநி­லத் தில் ஆக உச்­ச­மாக நேற்று 55 பேருக்கு தொற்று உறுதி ஆனது.