தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பறவைக் காய்ச்சலால் ஐரோப்பாவில் 3.5 மில்லியன் பறவைகள் பலி

1 mins read
24c86582-3d7d-4dd3-99d3-4c4edf08e5cf
-

பாரிஸ்: பற­வைக் காய்ச்­சல் கார­ண­மாக ஐரோப்­பா­வில் 3.5 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட பற­வை­கள் மாண்­டு­விட்­டன. இவற்­றில் விவ­சா­யி­கள் தங்­கள் பண்­ணை­களில் வளர்த்து வந்த பல வாத்­து­களும் அடங்­கும்.

கடந்த நான்கு ஆண்­டு­களில் இதுவே பற­வைக் காய்ச்­ச­லால் ஐரோப்­பா­வில் ஏற்­பட்­டுள்ள ஆக மோச­மான பாதிப்பு என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சில நாடுகளில் புதிய வகை பறவைக் காய்ச்சல் கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக கிருமி மேற்கொண்டு பரவாமல் இருக்க பண்ணைகளில் வளர்க்கப்படும் அனைத்துப் பறவைகளையும் அழிக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பாரிசில் இயங்கும் உலக விலங்கு சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.