ஜகார்த்தா: சீனாவின் சினோவெக் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கொவிட்-19 தடுப்பூசியின் அவசரகாலப் பயன்பாட்டிற்கு இந்தோனீசிய உணவு, மருந்துக் கண்காணிப்பு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. நோய்த்தொற்றால் தென்கிழக்காசியாவிலேயே ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனீசியா, அதன் 34 மாநிலங்களிலும் நாளை மறுதினம் முதல் தடுப்பூசித் திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்த ஒப்புதல் வழிவிடுகிறது.
மேற்கு ஜாவா மாநிலத் தலைநகர் பண்டோங்கில் நடத்தப்பட்ட முதற்கட்ட மருத்துவப் பரிசோதனையில், சினோவெக் தடுப்பூசிக்கு 65.3 விழுக்காடு செயல்திறன் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தோனீசியா இதுவரை மூன்று மில்லியன் சினோவெக் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. இந்த வாரம் கூடுதலாக 15 மில்லியன் தடுப்பூசிகளை அது பெறவிருக்கிறது.
ஃபைசர்-பயோஎன்டெக், ஆஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளையும் அந்நாடு பின்னர் பெறவிருக்கிறது.

