நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 29 முதியவர்கள் மரணம்

நார்வேயில் கொரோனா தடுப்பூசியின் முதல் ‘டோஸ்’ ஊசி போட்டுக்கொண்டவர்களில் 75 வயதுக்கு மேற்பட்ட 29 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் அங்கு 23 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. அண்மையில் 6 பேர் உயிரிழந்ததையடுத்து எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வரை நார்வேயில் ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பூசிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, தடுப்பூசி போடுவதில் முதியவர்களுக்கு முதலில் போடுவதா அல்லது வேறு வயது குழுக்களுக்கு முதலில் தடுப்பூசி போட்டு நோய்த் தடுப்பை அதிகரிப்பதா என்பது பற்றிய விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்த 29 பேரில் 13 பேரின் மரணம் பற்றி ஆய்வு செய்திருப்பதாகவும் மேலும் 16 பேரின் இறப்பு பற்றி தெரியும் எனவும் நார்வேகியன் மெடிசின்ஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

ஆனால், தடுப்பூசிக்கும் அவர்களது மரணத்துக்கும் தொடர்பு இருப்பதற்கான சாத்தியம் குறைவு என அதிகாரிகள் கருதுகின்றனர்.

ஆனால், மரணத்துக்கு முன்பு அவர்கள் அனைவரும் கடுமையாக நோய்வாய்ப்படத்தாகக் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!