ஈப்போவில் தைப்பூச கொண்டாட்டம் ரத்து

ஈப்போவில் தைப்பூச கொண்டாட்டம் ரத்து

2 mins read
a8743605-16af-4a50-b215-4aebe2522bf9
-

ஈப்போ: மலே­சி­யா­வின் குனுங் செரோ­வில் உள்ள ஸ்ரீ சுப்­பிர­ம­ணி­யர் கோயி­லில் இவ்­வாண்டு தைப்­பூ­சக் கொண்­டாட்­டங்­கள் இருக்­காது என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.நிபந்­த­னை­க­ளு­டன் கூடிய நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை அறி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தால், அந்­தக் கோயி­லில் தைப்­பூ­சம் தொடர்­பான அனைத்து நட­வ­டிக்­கை­களும் ரத்து செய்­யப்­ப­டு­வ­தாக ஈப்போ இந்து தேவஸ்­தான பரி­பா­லன சபா­வின் தலை­வர் எம்.விவே­கா­நந்தா தெரி­வித்­துள்­ளார்.

தைப்­பூ­சம் தொடர்­பான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் நிறுத்­து­மாறு போலி­சார் அறி­வு­றுத்தி இருப்­ப­தாக நேற்று அவர் வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது. பால்­கு­டம், காவடி, மொட்டை போடு­தல், ரத ஊர்­வ­லம், அன்­ன­தா­னம், அங்­கப்­பி­ர­தட்­ச­ணம் என எந்த நட­வ­டிக்­கை­யும் இருக்­காது என்­ப­து­டன் கோயி­லுக்கு அரு­கில் எந்­தக் கடை­யும் இருக்­காது என­வும் அவர் குறிப்­பிட்­டார்.

பாது­காப்பு நடை­மு­றை­க­ளுக்கு உட்­பட்டு சிறிய அள­வில் தைப்­பூச வழி­பா­டு­கள் மட்­டும் இடம்­பெ­றும் என்­றும் கடந்த வாரம் திரு விவே­கா­நந்தா தெரி­வித்­தி­ருந்த வேளை­யில் இந்த அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

பொதுப் போக்­கு­வ­ரத்து வழக்­கம் போல் இயங்­கும்

இதற்­கி­டையே, மலே­சி­யா­வில் நட­மாட்டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ர­வின் போது, பொதுப் போக்­கு­வ­ரத்து வழக்­கம் போல் செயல்­படும் என்று அந்­நாட்­டின் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் வீ கா சியோங் கூறினார்.

"பெரும்பாலானோர் தங்களின் அன்றாட தேவைகளுக்குப் பொதுப் போக்குவரத்தையே நம்பியிருப்பதால், அவர்களுக்காகப் பொதுப் போக்குவரத்து சேவைகள் வழக்கம் போல் தொடரும்," என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.

மேலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்போது பொதுப் போக்குவரத்­தில் பய­ணம் செய்­வோர் எண்­ணிக்கை குறை­வாக உள்­ள­தா­க­வும் அத­னால் கூட்ட நெரி­சல் இல்லை என்­றும் அவர் சொன்­னார்.

அதோடு முகக்­க­வ­சம் அணி­வது, கை சுத்­தி­க­ரிப்­பா­னைப் பயன்­ப­டுத்­து­வது, சமூக இடை­வெ­ளி­யைக் கடை­ப்பி­டிப்­பது போன்­ற­வற்­றைப்

பய­ணி­கள் சரி­யாக பின்­பற்­று­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தி­ருந்­தார்.

ஈப்போ முதி­யோர் இல்­லத்­தில் கிருமித்தொற்று

இதற்­கி­டையே, ஈப்­போ­வில் உள்ள அன்­னிங் ஓல்ட் ஃபோல்க்ஸ் முதி­யோர் பரா­ம­ரிப்பு இல்­லத்­தைச் சேர்ந்த ஏழு முதி­யோ­ர்கள், ஆறு ஊழி­யர்­கள் என 13 பேருக்குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

36 மூத்­தோர், 20 ஊழி­யர்­க­ளைக் கொண்ட இந்த பரா­ம­ரிப்பு இல்­லம் வரும் 20ஆம் தேதி வரை மூடப்­பட்­டி­ருக்­கும்.