ஜோகூர் பாரு: மலேசியாவில் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை இம்மாதம் ஆகப்பெரிய அளவில் போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளது. இம்மாதம் 14, 15ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட மூன்று சோதனைகளில் சுமார் 201 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய போதைப் பொருட்களை ஜோகூர் போலிசார் பறிமுதல் செய்தனர்.
ஜனவரி 12ஆம் தேதி பிடிபட்ட 14 சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டதாக ஜோகூர் போலிஸ் துறைத் தலைவர் அயோப் கான் மிடின் பிட்சே தெரிவித்தார்.
அதிரடி சோதனைகளின் போது 3.2 டன் எக்ஸ்டஸி தூளும், 26.1 கிலோ எக்ஸ்டஸி திரவமும் 117 கிலோ எர்மின் 5 தூளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது சுமார் 11 மில்லியன் போதைப் புழங்கிகள் பயன் படுத்தக்கூடிய அளவு என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனிடையே, எக்வடார் நாட்டிலிருந்து எஸ்தோனியாவிற்கு கடத்தப்படவிருந்த1.3 டன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.