தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆக அதிக வயதுடையவர்களில் இத்தாலியைச் சேர்ந்த ஃபாத்திமா நெகிரினி எனும் மூதாட்டியும் ஒருவர்.
108 வயதான அவருக்கு அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்றுத் தேறினார்.
மிலனில் இருக்கும் அன்னி அஸூரி சான் ஃபௌஸ்டினோ பராமரிப்பு இல்லத்தில் மற்ற குடியிருப்பாளர்களுடன் சேர்ந்து தடுப்பூசி போட்டுக்கொண்டார் அவர். வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி அவருக்கு 109 வயதாகும்.
இத்தாலியில் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கி இருக்கும் நிலையில் அங்கு இதுவரை 1.15 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.