(காணொளி) பாலித் தீவில் முகக்கவசம் அணியாத சுற்றுப் பயணிகளுக்கு ‘புஷ் - அப்’ தண்டனை

இந்தோனீசியாவின் பாலித் தீவில் உள்ள ரிசோர்ட்களில் முகக்கவசம் அணியாத வெளிநாட்டவர்களுக்கு வித்தியாசமான தண்டனை வழங்கப்படுகிறது.

‘புஷ்-அப்’ எனப்படும் உடற்பயிற்சியே அந்த தண்டனை.

டி-சட்டை, குட்டையான காற்சட்டைகள் அணிந்த சுற்றுப் பயணிகள் வெயிலில் ‘புஷ்-அப்’ செய்வதையும் முகக்கவசம் அணிந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களைக் கண்காணிப்பதையும் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் பரவியது.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது பாலியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு முகக்கவசம் அணியாமல் சுற்றிக்கொண்டிருந்த சுமார் 70 பேர் 100,000 ரூபியா ($9.45) அபராதம் கட்டினர். ஆனால், வேறு 30 பேர் தங்களிடம் பணம் இல்லை என்று கூறியதால் அவர்கள் ‘புஷ் - அப்’ உடற்பயிற்சி செய்ய பணிக்கப்பட்டது.

முகக்கவசம் இல்லாதவர்கள் 50 ‘புஷ் - அப்’களும் முகக்கவசத்தை சரியாக அணியாதவர்கள் 15 ‘புஷ் - அப்’களும் செய்ய வேண்டியிருந்தது.

கொரோனா கிருமித்தொற்று தொடர்பான விதிமுறைகளை மீறுவோர் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என பாலி ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!