ஹாங்காங் ஃபைஸர் பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசி மருந்தைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்க இணங்கியுள்ளதாக சவுத் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்தது. இதற்கான அனுமதியை அரசாங்கம் இந்த வாரத்திற்குள் அளித்துவிடும் என்றும் அந்த நாளிதழ் தெரிவித்தது. முன்னதாக இந்த தடுப்பூசி மருந்து சீனாவில் அனுமதிக்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. ஹாங்காங்கில் கொரோனா தொற்று ஓரளவுக்குக் கட்டுக்குள் இருக்கிறது.
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மருத்துவத்துறை ஆய்வாளர் குழு ஒன்று, ஃபைஸர் தடுப்பூசி மருந்தை பரிந்துரைத்துள்ளதாகவும், அதைப் பயன்படுத்துவதற்கு முன்னர் ஹாங்காங் அந்த மருந்து குறித்த, அதாவது அந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உடல்நிலை பற்றிய தரவு விவரங்களை அறிந்துகொள்வதற்கு ஜெர்மன், நார்வே ஆகிய அரசாங்கங்களிடம் நாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹாங்காங்கின் உணவு மற்றும் சுகாதாரத்துறையின் செயலாளர் சோஃபியா சான், ஃபைசர் தடுப்பூசி பயன்படுத்துவது குறித்த இறுதி முடிவை எடுப்பார் என்று அந்த நாளிதழ் தெரிவித்தது.
ஹாங்காங்கில் கொவிட்-19 தொற்றுக்கு இதுவரையிலும் 166 பேர் பலியாகியுள்ளனர். இது 2003 ஹாங்காங்கில் சார்சு நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கையில் பாதிதான்.