டிரம்ப்பை பதவி நீக்கும் தீர்மானம்: பிப்ரவரி 8ஆம் தேதி விசாரணை தொடக்கம்

முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்கும் தீர்மானம் மீதான விசாரணை பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அந்நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்ட சம்பவத்தில் ஐவர் உயிரிழந்தனர்.

இதற்கு டிரம்ப்பின் உந்துதலான பேச்சுகளே காரணம் என்று கூறப்பட்டது.

இதையடுத்து ஜனநாயகக் கட்சியினர், குடியுரசுக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஆதரவுடன் பிரதிநிதிகள் சபையில் அவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

இது செனட் சபை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தத் தீர்மானத்தின் மீதான விசாரணை தொடங்குகிறது.

இதற்கிடையே, தெற்கு கரோலினாவைச் சேர்ந்த பட்ச் பவர்ஸ் எனும் வழக்கறிஞரை, இந்த வழக்கில் தம்மைப் பிரதிநிதிக்க திரு டிரம்ப் அமர்த்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், இது குறித்த கேள்விக்கு திரு பவர்ஸ் பதிலேதும் தெரிவிக்கவில்லை என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!