இந்தோனீசியாவில் நிலைமை மேலும் மோசமடைகிறது; ஒரு மில்லியனை நெருங்கும் தொற்று எண்ணிக்கை

இந்தோனீசியா, கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக போராடி வருகிறது. ஆனால் அதையும் மீறி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தொடவிருக்கிறது.

உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள 4வது நாடான இந்தோனீசியாவில் திங்கட்கிழமை வரை 999,256 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

கடந்த ஒரு வார காலமாக நாளுக்கு சராசரியாக 11,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால் கிருமித் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை விரைவில் ஒரு மில்லியனைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுவாசக் கோளாறுகளால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் 28,132க்கு கூடியிருக்கிறது.

இந்தோனீசியாவில் நாளுக்கு நாள் கிருமிப்பரவல் மோசமமைடந்து வரும் சூழ்நிலையில் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியும் நடை பெற்று வருகிறது.

இந்தோனீசியா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மெத்தனமாக இருந்து வருவதாக பரவலாகக் குறை கூறப்படுகிறது.

பரிசோதனைகளும் குறைவாக நடத்தப்படுகின்றன. தொற்றுகளின் தொடர்புகளைக் கண்டறிவதும் வலுவாக நடைபெறுவதில்லை.

ஜகார்த்தவாசியான 42 வயது சப்ரியாந்தி, சமூக இடைவெளியை அரசாங்கம் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“மக்கள் நெரிசல்மிக்க இடங்களிலும் பலர் முகக் கவசங்களை அணிவதில்லை. அரசாங்கம் கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டும்,” என்றும் அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!