இந்தோனீசியா, கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக போராடி வருகிறது. ஆனால் அதையும் மீறி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தொடவிருக்கிறது.
உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள 4வது நாடான இந்தோனீசியாவில் திங்கட்கிழமை வரை 999,256 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
கடந்த ஒரு வார காலமாக நாளுக்கு சராசரியாக 11,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால் கிருமித் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை விரைவில் ஒரு மில்லியனைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவாசக் கோளாறுகளால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் 28,132க்கு கூடியிருக்கிறது.
இந்தோனீசியாவில் நாளுக்கு நாள் கிருமிப்பரவல் மோசமமைடந்து வரும் சூழ்நிலையில் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியும் நடை பெற்று வருகிறது.
இந்தோனீசியா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மெத்தனமாக இருந்து வருவதாக பரவலாகக் குறை கூறப்படுகிறது.
பரிசோதனைகளும் குறைவாக நடத்தப்படுகின்றன. தொற்றுகளின் தொடர்புகளைக் கண்டறிவதும் வலுவாக நடைபெறுவதில்லை.
ஜகார்த்தவாசியான 42 வயது சப்ரியாந்தி, சமூக இடைவெளியை அரசாங்கம் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“மக்கள் நெரிசல்மிக்க இடங்களிலும் பலர் முகக் கவசங்களை அணிவதில்லை. அரசாங்கம் கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டும்,” என்றும் அவர் சொன்னார்.