உலக அளவில் 100 மில்லியன் மக்களுக்கு கொவிட்-19

உலகெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 மில்லியனைக் கடந்துவிட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் மட்டும்25 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் அந்நோய் காரணமாக 420,000க்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டனர்.

இந்நிலையில், கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று அமெரிக்காவின் புதிய அதிபராக அண்மையில் பதவியேற்ற ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார்.

அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது கடுமையான சவால் என்று திரு பைடன் கூறினார். அதுமட்டுமல்லாது, முன்னாள் அதிபடர் டோனல்ட் டிரம்ப் நடைமுறைப்படுத்திய திட்டங்கள் நினைத்ததைவிட மிகவும் மோசமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

கூடுதலாக 200 மில்லியலன் தடுப்பூசி மருந்துகளை அமெரிக்கா வாங்குவதாகவும் அடுத்த சில மாதங்களில் 300 மில்லியன் அமெரிக்கர்களுக்குப் போதுமான தடுப்பூசி மருந்து இருப்பில் இருக்கும் என்றும் திரு பைடன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!