இந்தோனீசியாவின் ஜாவா தீவில் உள்ள மெராப்பி எரிமலை இன்று வெடித்தது.
அதிலிருந்து கரும்புகை, சாம்பல், எரிமலைக் குழம்பு போன்றவை குபுகுபுவென வெளியேறின.
எரிமலைக் குழம்பு சாலைகளை அடையக்கூடும் என்று இந்தோனீசிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
எரிமலைக்கு அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் கிராமவாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர்.