கொவிட்-19 கிருமி முதலில் பரவிய வூஹான் சந்தையில் உலக சுகாதாரக் குழு

கொவிட்-19 கிருமி முதலில் பரவிய வூஹான் சந்தையில் உலக சுகாதாரக் குழு

2 mins read
6eebc6cd-18ad-4293-913a-e20ad3461d4c
கொவிட்-19 கிருமியின் தோற்றம் குறித்து ஆராயும் உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பினர்கள், சீனாவின் வூஹானில் மூடப்பட்ட ஹுவானான் கடல் உணவு மொத்த சந்தைக்குச் சென்றனர். படம்: ஏஎஃப்பி -

முதன் முத­லில் கொவிட்-19 கிரு­மித் தொற்­றுக் குழு­மம் கண்­ட­றி­யப்­பட்ட சீனா­வின் வூஹான் சந்தைக்கு உலக சுகா­தார நிறு­வ­னக் குழு­வி­னர் சென்­ற­னர்.

கொவிட்-19 கிருமி விலங்­கு­களி­டம் இருந்து எவ்­வாறு மனி­த­னுக்குப் பர­வி­யது என்­பது குறித்த ஆய்­வு­களை மேற்­கொள்ள சீனா சென்­றுள்ள இந்த நிபு­ணர் குழு, வூஹான் நக­ரி­லுள்ள அந்த மிகப் பெரிய விலங்கு சந்­தை­யில் நேற்று ஆய்­வு­களை மேற்­கொண்­ட­னர். அவர்­க­ளு­டன் நூற்­றுக்­க­ணக்­கான சீன அதி­கா­ரி­களும் உடன் சென்­ற­னர்.

சீனா­வில் ஆய்­வு­களை மேற்­கொள்ள அனு­மதி தரா­மல் சீனா இழுத்­த­டித்த­தால் இக்­கு­ழு­வின் பணி தாம­த­மா­கி­யது. இதற்கு உலக சுகா­தார நிறு­வ­னம் கடும் அதி­ருப்தி தெரி­வித்த பிறகே, இக்­கு­ழு­வுக்­குச் சீனா அனு­மதி அளித்­தது. சீனா சென்ற வல்­லு­நர் குழு தனி­மைப்­ப­டுத்­தப்­படும் காலம் முடிந்து வெள்­ளிக்கிழமை ஆய்வுப் பணி­க­ளைத் தொடங்­கி­யது.

கடந்த 2019ஆம் ஆண்டு இறு­தி­யில் சீனா­வின் ஹூபே மாகா­ணத்­தி­லுள்ள வூஹான் நக­ரில் முத­லில் கொவிட்-19 கிருமி கண்­ட­றி­யப்­பட்­டது.

ஆய்­வுப் பணி­யின் தொடக்­க­நி­லை­யி­லேயே, உல­கெங்­கும் இரண்டு மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான மக்­க­ளைக் கொன்­ற­து­டன் உல­கப் பொரு­ளி­ய­லை­யும் பேர­ழி­விற்கு உட்­ப­டுத்­திய கிரு­மி­யின் மூலத்­தைக் கண்­டு­பி­டிப்­ப­தற்­கான சாத்­தி­யம் குறைவு என்று ஆய்­வுக்­கு­ழு­வி­னர் கூறி­யுள்­ள­னர்.

குழு உறுப்­பி­னர்­கள் தங்­கள் சீன புர­வ­லர்­க­ளால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட வரு­கை­க­ளுக்கு மட்­டுப்­படுத்­தப்­ப­டு­வார்­கள் என்­றும் சுகா­தார கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக சமூக உறுப்­பி­னர்­க­ளு­டன் எந்தத் தொடர்­பும் இருக்­காது என்­றும் உலக சுகாதார நிறு­வ­னம் வெள்­ளிக் கிழமை கூறி­யது.

"கொவிட்-19 தொற்­று­நோய் குறித்து புரிந்­து­கொள்­வது குழு­வுக்கு மிக முக்­கி­ய­மா­ன­தும் மிக அத்­தி­யா­வ­சி­ய­மான தக­வ­லும் ஆகும் என்று குழு உறுப்­பி­னர் பீட்­டர் தாஸ்­ஸாக் தமது டுவிட்­டர் செய்­தி­யில் தெரி­வித்­தார்.

வல்­லு­நர்­கள் செய்­தி­யா­ளர்­க ளின் கேள்­வி­க­ளுக்கு பதில் அளிக்க­ வில்லை. சந்தை உய­ர­மான தடுப்­பு­க­ளால் மூடப்­­பட்­டுள்­ளது. செய்தி­ யா­ளர்­களை வெளி­யே­றும்­படி கூறிய பாது­காப்பு அதி­கா­ரி­கள், ஏணி மீது ஏறி படம் எடுக்க முயன்ற புகைப்­ப­டக்­கா­ர­ரின் ஏணியை உலுக்­கி­னர். ஒரு மணி நேர கள ஆய்­வுக்­குப் பின்­னர் வல்­லு­நர்­கள் வாக­னத்­தில் கிளம்­பிச் சென்­ற­னர் என்று செய்­தி­கள் தெரி­வித்­தன.