மியன்மார்: ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடிப்பு

மியன்மார்: ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடிப்பு

3 mins read
7dcfe489-e0e9-4a26-8f13-6cb9483402b5
ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக தலைநகர் நேப்பிடோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சிய போலிசார். படம்: இபிஏ -

மியன்­மா­ரில் ஜன­நா­யக முறை­யில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அர­சாங்­கத்தை அந்­நாட்டு ராணு­வம் அண்­மை­யில் கவிழ்த்­தது.

மியன்­மார் தலை­வர் ஆங் சான் சூச்சி உட்­பட மற்ற அர­சி­யல் தலை­வர்­களும் தடுப்­புக்­கா­வ­லில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். இதற்கு மியன்­மார் மக்­களும் உலக நாடு­களும் கண்­ட­னம் தெரி­வித்­தன.

மியன்­மார் தலை­ந­கர் நேப்­பி­டா­வில் கடந்த மூன்று நாட்­க­ளாக ஆட்­சிக் கவிழ்ப்­புக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், நேற்று காலை ஆர்ப்­பாட்­டம் தீவி­ர­ம­டைந்­தது. மியன்­மா­ரெங்­கும் உள்ள பல நக­ரங்­களில் ஆயி­ரக்­க­ணக்­கான ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் ராணு­வத்­துக்கு எதி­ராக முழக்­க­மிட்டு பேரணி நடத்­தி­னர்.

தலை­ந­கர் நேப்­பி­டோ­வில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளைக் கலைக்க மியன்­மார் போலி­சார் தண்­ணீர் பீய்ச்­சி­ய­தாக வெளி­நாட்டு செய்தி நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்த புகைப்­ப­டச் செய்­தி­யா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதில் இரு­வர் காய­முற்­ற­தாக ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னத்­தின் புகைப்­ப­டச் செய்­தி­யா­ளர் கூறி­னார். ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் மீது ரசா­ய­னம் கலந்த தண்­ணீரை போலி­சார் பீய்ச்­சி­ய­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது. இதன் கார­ண­மாக அந்த இரு­வர் மயங்கி விழுந்­த­தாக நம்­பப்­ப­டு­கிறது.

மியன்­மா­ரின் ஆகப் பெரிய நக­ர­மான யங்­கூ­னில் புத்த பிக்­கு­களும் ஆர்ப்­பாட்­டத்­தில் கலந்­து­கொண்­ட­னர்.

பேரணி நடத்­திய ஊழி­யர்­கள், மாண­வர்­கள் ஆகி­யோ­ரு­டன் அவர்­களும் சேர்ந்­து­கொண்­ட­னர்.

யங்­கூ­னில் உள்ள பூங்கா ஒன்­றில் 1,000க்கும் மேற்­பட்ட ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் நேற்று காலை கூடி­னர்.

பௌத்த சம­யக் கொடி­க­ளு­டன் திரு­வாட்டி சூச்­சி­யின் தேசிய ஜன­நா­யக இயக்கக் கட்­சி­யின் சிவப்பு நிறக் கொடி­களும் அங்கு பறக்­க­வி­டப்­பட்­ட­தாக நேரில் கண்­ட­வர்­கள் தெரி­வித்­த­னர்.

"எங்­கள் தலை­வர்­கள் விடு­விக்­கப்­பட வேண்­டும். எங்­கள் வாக்­க­ளிப்­புக்கு மதிப்­ப­ளிக்க வேண்­டும். ஆட்­சிக் கவிழ்ப்பை ஏற்­க­மாட்­டோம்," என்ற வாச­கங்­க­ளைக் கொண்ட பதா­கை­கள் ஆங்­காங்கே வைக்­கப்­பட்­டன.

ஜன­நா­ய­கத்­துக்கு ஆத­ர­வா­க­வும் சர்­வா­தி­கா­ரத்­துக்கு எதி­ரா­க­வும் பதா­கை­கள் வைக்­கப்­பட்­டன. ஆட்­சிக்­க­விழ்ப்­புக்கு எதிர்ப்பு காட்­டும் வகை­யில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் பலர் கறுப்பு நிற ஆடை­களை அணிந்­த­னர்.

யங்­கூ­னில் நடை­பெ­றும் ஆர்ப்­பாட்­டத்­துக்கு சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் தலைமை தாங்­கு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

ஆட்­சிக்­க­விழ்ப்­புக்கு எதிர்ப்­புக் குரல் எழுப்­ப­வும் ராணு­வத்­து­டன் ஒத்­து­ழைக்க வேண்­டாம் என்றும் அவர்­கள் மற்ற துறை­களில் உள்ள அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்கு அழைப்பு விடுத்­துள்­ள­னர்.

ராணுவ ஆட்­சியை முடி­வுக்­குக் கொண்டு வரு­வதே ஆர்ப்­பாட்­டங்­க­ளின் இலக்கு என்­றும் தங்­கள் உரி­மை­க­ளுக்­கா­க­வும் எதிர்­கா­லத்­துக்­கா­க­வும் போரா­டு­வ­தாக ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்ட தாதி­கள் கூறி­னர்.

"இன்று வேலை நாள். ஆனால் சம்­ப­ளம் கிடைக்­கா­விட்­டா­லும் பர­வா­யில்லை. நாங்­கள் வேலைக்­குப் போக­வில்லை," என்று ஆர்ப்­பாட்­டாத்­தில் ஈடு­பட்ட ஜவுளி ஆலை ஊழி­யர் ஒரு­வர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

2007ஆம் ஆண்­டில் புத்த பிக்­கு­கள் தலை­மை­யில் நடை­பெற்ற காவிப் புரட்­சிக்­குப் பிறகு நேற்று முன்­தி­னத்­தி­லி­ருந்து நடை­பெற்று வரும் ஆர்ப்­பாட்­டங்­களே ஆகப் பெரி­யவை.

அமை­தி­யான முறை­யில் ஆர்ப்­பாட்­டம் நடத்­தும்­படி சக ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளைக் கேட்­டுக்­கொள்­ளும் வகை­யில் சமூக ஆர்­வ­லர்­கள் சிலர் சமூக ஊட­கத்­தில் பதி­விட்­டுள்­ள­னர்.

சமூக ஊடக இணைப்பை முடக்க மியன்­மார் ராணு­வம் முயன்று வரு­வ­தால் விபி­என் கட்­ட­மைப்­பு­களை சமூக ஆர்­வ­லர்­கள் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர்.

மியன்­மார் மக்­க­ளி­ட­மி­ருந்து கிளம்­பி­யி­ருக்­கும் இந்த அதி­ருப்தி அலை குறித்து அந்­நாட்டு ராணு­வத் தலை­வர்­க­ளின் கருத்­தைக் கேட்க ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னம் முயன்­றது.

ஆனால் அவர்­க­ளு­டன் தொடர்­பு­கொள்ள முடி­ய­வில்லை என்று அதன் செய்­தி­யா­ளர்­கள் தெரி­வித்­த­னர். ஆர்ப்­பாட்­டங்­கள் பற்றி மியன்­மார் தொலைக்­காட்­சி­யில் எந்த ஒரு செய்­தி­யும் ஒளி­ப­ரப்பு செய்­யப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.