மியன்மாரில் ஐந்தாவது நாளாக ஆர்ப்பாட்டம்; போராட்டம் நடத்தியோரை தாக்கியதற்கு ஐநா, அமெரிக்கா கண்டனம்

பதவி நீக்­கம் செய்­யப்­பட்ட அர­சாங்க ஆலோ­ச­கர் ஆங் சான் சூச்­சி­யின் யங்­கூன் தலைமை அலு­வ­ல­கத்­தில் மியன்­மார் ராணு­வம் செவ்­வாய் இரவு புகுந்து சோதனை நடத்தி உள்­ளது. இரவு 9.30 மணி அள­வில் தங்­க­ளது தலைமை அலு­வ­ல­கத்­தில் ராணு­வம் சோதனை நடத்­தி­ய­தாக என்­எல்டி எனப்­படும் தேசிய ஜனநாயக இயக்கக் கட்சி தனது அறிக்கையில் குறிப்­பிட்­டது. இருப்­பி­னும் மேல் விவ­ரங்­களை அது வெளி­யி­ட­வில்லை.

பல்­வேறு நக­ரங்­களில் பொது­மக்­கள் ஒன்­று­தி­ரண்டு ராணு­வத்­தின் ஆட்­சிக் கவிழ்ப்பு நட­வ­டிக்­கையை எதிர்த்து போராட்­டம் நடத்­திய வேளை­யில் இந்­தச் சோதனை நடத்­தப்­பட்டு உள்­ளது. ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளைக் கலைக்க தண்­ணீ­ரைப் பீய்ச்­சி­ய­டித்­தும் ரப்­பர் தோட்­டாக்­க­ளால் வான் நோக்கி சுட்­டும் போலி­சார் அதி­ரடி நட­வ­டிக்­கை­யில் இறங்­கி­னர்.

தொடர்ந்து நேற்­றும் 5வது நாளாக ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் ஆங்­காங்கே வீதி­களில் திரண்டு எதிர்ப்பு முழக்­கங்­களை எழுப்­பி­னர். மியன்­மா­ரின் நவீன தலை­ந­கர் நேபி­டோவில் நூற்­றுக்­க­ணக்­கான அர­சாங்க ஊழி­யர்­கள் மக்­க­ளின் ஒத்­து­ழை­யாமை இயக்­கப் பிர­சா­ரத்­திற்கு ஆத­ர­வ­ளித்து ஊர்­வ­ல­மா­கச் சென்­ற­னர்.

மருத்­து­வர்­கள், ஆசி­ரி­யர்­கள், ரயில்வே ஊழி­யர்­கள் போன்­றோர் அந்த ஊர்­வ­லத்­தில் காணப்­பட்­ட­னர்.

முன்­ன­தாக, நேப்பி­டோவி­லும் மான்டலே நக­ரி­லும் பாது­காப்­புப் படை­யி­ன­ரின் தாக்­கு­த­லில் சிலர் காய­ம­டைந்­த­னர். போலி­சாரை நோக்கி கற்­க­ளை­யும் செங்­கற்­க­ளை­யும் வீசி­யோரை போலி­சார் திருப்­பித் தாக்­கி­ய­போது அவர்­கள் காய­ம­டைந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்ட செயலை அமெ­ரிக்­கா­வும் ஐநா அமைப்­பும் வன்­மை­யா­கக் கண்­டித்­துள்­ளன.

“அமைதியாக ஒன்றுகூட மியன்மார் மக்களுக்கு உரிமை உண்டு. அவர்கள் மீது கட்ட விழ்த்துவிடப்பட்ட வன்முறை கண்டிக்கத்தக்கது,”என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் நெட் பிரைஸ் செய்தி யாளர்களிடம் கூறினார்.

இதற்­கி­டையே, பெண் ஒரு­வர் உண்­மை­யான தோட்­டா­வால் சுடப்­பட்­ட­தாக நேப்­பிடோ மருத்­து­வ­

ம­னை­யைச் சேர்ந்த மருத்­து­வர் ஒரு­வர் ராய்ட்­டர்ஸ் செய்­தி­யி­டம் கூறி­னார். தலை­யில் சுடப்­பட்ட அவ­ரின் நிலை கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தா­க­வும் உயிர் பிழைப்­பது கடி­னம் என்­றும் அவர் தெரி­வித்­தார். சமூக ஊட­கங்­களில் பர­விய காணொளி ஒன்றை ராய்ட்­டர்ஸ் சரி­பார்த்­தது.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளு­டன் இணைந்து அந்­தப் பெண் நிற்­ப­தும் கல­வ­ரத் தடுப்­புப் போலி­சார் தண்­ணீ­ரைப் பீய்ச்­சி­ய­டிப்­ப­தும் துப்­பாக்­கி­யால் சுடும் சத்­த­மும் அந்த காணொ­ளி­யில் பதி­வாகி இருந்­தது.

தலைக்­க­வ­சம் அணிந்­தி­ருந்­த­ அந்­தப் பெண் திடீ­ரென நிலை­கு­லைந்து கீேழ விழுந்­தார். அவரது தலைக்­ க­வ­சத்­தில் காணப்­பட்ட துவா­ரம் துப்­பாக்கி தோட்டா துளைத்­த­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!