மியன்மாரில் ஓயாத ஆர்ப்பாட்டம்

மியன்மாரில் ஓயாத ஆர்ப்பாட்டம்

2 mins read
eb714446-d59e-49c7-a6e9-f80d3579fadd
ஆங் சான் சூச்சியை விடுவிக்கக் கோரி தாதிகளும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். படம்: ஏஎஃப்பி -

மியன்­மா­ரில் அர­சாங்­கத்­தைக் கவிழ்த்த ராணு­வத்­துக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டங்­கள் வலுத்து வரு­கின்­றன. அர­சாங்க ஆலோ­சக ரான ஆங் சான் சூச்­சியை கைது செய்து அவ­ரது இருப்­பி­டம் தெரி­யா­மல் ராணு­வம் மறைத்து வைத்­துள்­ளது. இதனால் அவரை உட­ன­டி­யாக விடு­விக்க வேண்­டும் என்று ஐநா வலி­யு­றுத்தி வரு­கிறது.

பத்து ஆண்டுகள் நீடித்த ஜன­நா­யக ஆட்சியை ராணு­வம் கடந்த வாரம் கவிழ்த்தது. முக்கிய அர­சியல் தலை­வர்­கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து ஆவேசமடைந்த மியன்­மார் மக்­கள் தெருக்­களில் கூடி ஆங் சாங் சூச்­சியை விடு­விக்­கக் கோரும் வாச­கங்­களுடன் தொடர்ந்து ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். தேர்­த­லில் முறை­கேடு நடந்ததாகக் கூறப்­ப­டு­வ­து பொய் என்று ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் முழக்கமிட்டு வருகின்றனர். நேற்றும் நேப்­பி­டாவ் சாலை­க­ளி­லும் முக்­கிய பகு­தி­க­ளிலும் திரண்ட ஆயி­ரக்­க­ணக் கான­வர்­கள் 'இர­வில் கடத்­தும் வேலையை நிறுத்து' என்று குரல் கொடுத்துள்ளனர்.

இரவு ஊர­டங்கு உத்­த­ர­வை­யும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் மதிக்க வில்லை. அர­சாங்க ஊழி­யர்­களும் மருத்­து­வர்­களும் ராணு­வத்­துக்கு எதி­ராக போர்க்­கொடி தூக்கி வரு வதால் அவர்­க­ளை­யும் கைது செய்ய ராணு­வம் திட்­ட­மிட்டு வரு­கிறது.

இதற்­கி­டையே பாத் தேய்ன் நக­ரில் உள்­ளூர் மருத்­து­வர் ஒரு­வரை ராணு­வத்­தி­னர் அழைத்­துச் செல்­வ­தாக தக­வல் பர­வி­ய­தால் பதற்­றம் அதி­க­ரித்­தது. அவரைக் காப்­பாற்ற ஒரு கும்­பல் மருத்­து­வ­ம­னையை முற்­றுகையிட்­டது. ஆனால் தனக்கு எது­வும் நேர­வில்லை என்று கூறிய மருத்துவரான தான் மின் டுட், உதவி தேவைப்­பட்­டால் அழைப்­ப­தா­கக் கூறி அந்த கும்­பலை அனுப்பி வைத்­தார். கடந்த வாரம் ஆட்சி கவிழ்க்­கப் பட்­ட­தி­லி­ருந்து ஏறக்­கு­றைய 320 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.