அடக்க முயலும் ராணுவம்; பொங்கி எழும் மக்கள்

அடக்க முயலும் ராணுவம்; பொங்கி எழும் மக்கள்

1 mins read
9c3f7bbe-8832-4d84-b5c8-7d39a4c3b228
ராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புத்த பிக்குகள். படம்: ஏஎஃப்பி -

யங்­கூன்: மியன்­மா­ரில் நடை­பெ­றும் ராணுவ ஆட்­சியை எதிர்த்து நாடெங்­கும் ஆர்ப்­பாட்­டங்­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன.

இந்­நி­லை­யில், மக்­க­ளி­டையே எழுந்­துள்ள எதிர்ப்­பு­களை முறி­ய­டிக்க மியன்­மார் ராணு­வம் கடு­மை­யான சட்­டத்தை அமல்ப­டுத்­தி­யுள்­ளது.

அதன்­படி இரவு முழு­வ­தும் தங்­கள் வீட்­டில் தங்­கும் விருந்­தி­னர்­

க­ளின் பெயர்­களை அதி­கா­ரி­க­ளி­டம் பதிவு செய்ய வேண்­டும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தச் சட்­டத் திருத்­தத்­துக்கு உடன்­ப­டா­த­வர்­க­ளுக்கு அபரா­தம் அல்­லது சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம்.

நீதி­மன்ற அனு­ம­தி­யின்றி ராணுவ வீரர்­கள் வீடு­க­ளுக்­குள் சென்று தேட­லாம் அல்­லது சந்­தேக நபர்­க­ளைத் தடுத்து வைக்­க­லாம் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அண்­மைய ஆட்­சிக் கவிழ்ப்பை எதிர்த்து ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு ஏற்­பாடு செய்த பல­ரைக் கைது செய்ய மியன்­மார் ராணு­வம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

ராணுவ ஆட்­சி­யை­யும் அடக்­கு­மு­றை­யை­யும் எதிர்த்து மேற்­கத்திய நாடு­கள் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளன. மியன்­மார் ராணு­வத் தலை­வர்­க­ளுக்கு எதி­ராக அமெ­ரிக்கா சில தடை­களை விதித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் மியன்­மா­ரின் ஆகப் பெரிய நக­ரான யங்­கூன், தலை­ந­கர் நேப்­பி­டாவ் உட்­பட பல நக­ரங்­களில் பெரிய அள­வில் ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்­றன.

இத­னைத் தொடர்ந்து, மியன்­மார் ராணு­வத்தை சமூக ஊட­கம் வாயி­லாக கடு­மை­யாக விமர்­சித்த ஏழு பிர­ப­லங்­களைக் கைது செய்ய உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

கைது ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டோ­ரைக் காப்­பாற்­றும் நோக்­கில் அவர்­க­ளுக்கு அடைக்­க­லம் தரு­ப­வர்­க­ளுக்கு தண்­டனை விதிக்­கப்­படும் என்று ராணு­வம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

இருப்­பி­னும், ராணுவ ஆட்­சிக்கு எதி­ரான எதிர்ப்பு தணி­ய­வில்லை. ராணுவ வீரர்­கள், போலி­சார் ஆகி­யோ­ரி­ட­மி­ருந்து தங்­க­ளைத் தற்­காத்­துக்­கொள்ள முக்­கிய நக­ரங்­களில் வசிக்­கும் மியன்­மார் மக்­கள் சுற்­றுக்­கா­வல் குழுக்­களை அமைத்­துள்­ள­னர்.