உலக நாடுகளிலிருந்து முதலீட்டை ஈர்க்க ஜோகூர் சுல்தான் ஆர்வம்

உலக நாடுகளிலிருந்து முதலீட்டை ஈர்க்க ஜோகூர் சுல்தான் ஆர்வம்

1 mins read
9cedee25-5738-40d8-81b3-273fc6bdd284
-

ஜோகூர்: கொவிட்-19 சூழலுக்­குப் பிந்­திய நிலை­யில் முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தில் கவ­னம் செலுத்­து­வது அவ­சி­யம் என ஜோகூர் சுல்­தான் இப்­ரா­கிம் இஸ்­கந்­தர் கூறியுள்ளார்.

"தடுப்­பூ­சித் திட்­டத்­தில் நாடு­கள் ஈடு­பட்டு வரு­வ­தால் பொரு­ளி­யல் வழக்­க­நி­லையை எட்­டும். அந்த மாற்­றத்­தின் பலனை ஜோகூ­ரும் பெறவேண்­டும்," என்று சீனப் புத்­தாண்டு தொடர்­பான நேர்­

கா­ணல் ஒன்­றில் அவர் கூறி­னார்.

"வெளி­நாட்டு நேரடி முத­லீடுகள் தற்போது அதிக போட்­டித்­தன்­மை­யு­டன் இருப்­பதை ஜோகூர் மக்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும். முத­லீட் ­டா­ளர் எந்த நாட்­டி­னர் என்­கிற ஆராய்தல் தேவை இல்லை. அமெ­ரிக்கா, சிங்­கப்­பூர், ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­கள், தைவான், சீனா என எந்த நாட்­டி­ன­ரும் நிபு­ணத்­துவ ரீதி­யாக முத­லீடு செய்ய முன்­வந்­தால் நாம் அதனை வர­வேற்க வேண்­டும்," என்­றார் சுல்­தான்.