குற்றவாளிகளைப் பிடிக்க கராச்சி போலிஸ் புது உத்தி

குற்றவாளிகளைப் பிடிக்க கராச்சி போலிஸ் புது உத்தி

1 mins read
72604991-e439-427f-bf43-73202a6f401f
சாலையோர நடைபாதையில் சுற்றுக்காவலில் ஈடுபடும் கராச்சியின் பெண் போலிஸ் அதிகாரிகள். படம்: ராய்ட்டர்ஸ் -

பாகிஸ்­தா­னின் கராச்சி நக­ரத்­தில் உள்ள சாலை­களில் திருட்டு, பொது­மக்­க­ளுக்­குத் தொல்லை விளை­விக்­கும் குற்­றங்­க­ளைத் தடுக்க அந்­ந­கர போலிஸ் படை புதிய உத்தி ஒன்­றைக் கையாண்டு வரு­கிறது.

'ரோலர்­பி­ளே­டிங்' எனும் சறுக்­குக் கால­ணி­க­ளைப் பயன்­ப­டுத்தி சுற்­றுக்­கா­வ­லில் ஈடு­படும் புதிய போலிஸ் பிரிவு அமைக்­கப்­பட்­டுள்­ளது.

"சாலை­களில் நடக்­கும் குற்­றங்­க­ளைத் தடுக்க புத்­தாக்­க­மிக்க அணு­மு­றை­யைக் கையாள வேண்­டும் என நாங்­கள் ஒரு முடி­வுக்கு வந்­தோம்," என்று பு­திய பிரி­வின் தலை­வர் ஃபரூக் அலி தெரி­வித்­தார். மோட்­டார் சைக்­கிள்களில் தப்­பிச் செல்ல முய­லும் திரு­டர்­களை விரட்­டிச் சென்று மடக்­கிப் பிடிக்க இந்த 'ரோலர்­பி­ளே­டிங்' உத்தி கைமேல் பல­னைத் தரும் என்­றார் அவர். ஆனால் கராச்­சி­யில் உள்ள அனைத்­துப் பகு­தி­

க­ளி­லும் இந்த உத்­தி­யைக் கையாள முடி­யாது என்று அவர் தெரி­வித்­தார். சீரற்ற சாலை­கள், நடைபா­தை­கள் ஆகி­யவை இதற்­குக் கார­ணம் என அவர் கூறி­னார். ஆனால் குற்­றங்­கள் அதி­கம் நிக­ழும் இடங்­க­ளுக்கு ரோலர்­

பி­ளேடு பிரிவு அதி­கா­ரி­கள் அனுப்பிவைக்­கப்­ப­டு­வர் என்­றார் அவர். ஒவ்­வோர் அதி­கா­ரி­யும் கைத்­துப்­பாக்கி ஒன்றை வைத்­தி­ருப்­பார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ரோலர்­பி­ளேடு­க­ளைப் பயன்­ப­டுத்தி போலிஸ் அதி­கா­ரி­கள் சுற்­றுக்­கா­வ­லில் ஈடு­ப­டு­வது தங்­க­ளுக்குப் பாது­காப்பு உணர்­வைத் தரு­வ­தாக கராச்­சி­யைச் சேர்ந்த முகம்­மது அஸீம் தெரி­வித்­தார். கராச்சி மக்­க­ளி­டையே இப்­பு­திய உத்­திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.