லண்டன்: இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை செல்வோர், கொவிட்-19 கிருமித் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று சவூதி அரேபிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளதாக அந்நாட்டின் ஒகாஸ் என்னும் நாளிதழ் தெரிவித்தது.
ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வோர் அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு, தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பது கட்டாயமாக்கப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.
கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதன் நோக்கில் இந்தப் புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அந்நாளிதழ் தெரிவித்தது.